A friend of mine yesterday said that it is hard to think that i played with toys even when i was a kid. (??). I dont know what she thought, but i promised her that i would write my toy story here in my blog.
When i was a kid, i really was an ordinary kid. I loved toys like any other child. I reckon playing with my imaginery soldiers (can be toys or pens or just my bare fingers) in a never land battle field. And when i played, it was always fights and fights forever. There wouldn't be any story. And thanks to our tamil cinemas then, my hero would always start fighting only after getting beaten black and blue. Later when the hero raises, the villain had no chance of standing before him...dishoom, dasham, ghumaal, dumeel...thats all.
The first toy i could ever remember was a small rubber teddy bear that would make sound when you squeeze. I had a pink colored one and my brother had the same in yellow color. Then a baby doll that closes her eyes when we tilt it a little bit. i.e., it would close its eyes when we lay it flat. This baby doll was a favourite of my father's sister who was studing 7th or 8th then. (so young athhai(aunt) because she was the 7th daughter of my grandpa and my father was the first son). When she comes home for leave, she would shower this baby doll, dress it, comb it and even feed it by keeping some food in its mouth. We loved watching my doll and aunt playing together.
Then i remember having a military Jeep and my brother got a fancy red car. Then a blue soldier toy. And the best ever was my he-man. I invited my friend home just to show it to him. Most of the afternoons, i would just lay in my bed playing with that tough guy. (dont remember what my brother got when i was having this blue soldier and he-man.)
My brother grew sooner than me and get past this toy era. He started playing with neighboorhood boys and girls. It took a long time for me to get out of my never land battle field. In fact, very longgggggg.
My dad being a government officer, used to get transfer often. Everytime we moved, we would trash the toys or give it to relatives. So when i reached 7th standard, there was no toys to play with. Our play shelve was full with cricket bat, stumps, shuttle cork bats, basket ball, chess and carrom board. Somewhere inside me, i still wanted a soldier toy. I was so shy to ask my dad since i was a little man already. And i was scared what my mom would say. As always, I bugged my brother to convey it to my dad. I would do some help to my bro and would ask him to do this favor in return. This continued for months. Somehow or the other, we didn't express my desire.
One day, there was an ad for dabur honey. Buy a medium sized bottle and you get a soldier toy free. It was my time to act on. I showed the paper to my bro and we decided that we would ask for honey which we said is good for health and insist in buying dabur honey. My dad was trimming his moustache. I went near him casually (nervous inside) doing something else. My brother followed me to the dinning table and we were unnecessarily moving things in the table signalling each other to start the conversation.
Finally i spitted it out. 'Daddy, look at this ad. This honey is good one, my friends said.' Without turning back he said 'yes honey is good for health. I would buy you one'. Then he continued his work. Half part was done. I looked at my brother. It was his turn to tell my dad to buy the same brand so we can get the toy. 'If we buy this honey we get a toy free. Jeevan wants the toy'. He said it easily (it was my problem right) and we (or I) anxiously waited. 'Ok, I will surely buy' my father said again. We ran to our room and i was so happy and waited for the honey bottle.
Two days later, honey bottle arrived as my father promised. Different brand and no free toy. :(
The longing for the toy grew inside me and i could not take it anymore. I took a brave decision few months later and asked my father shamelessly. I could not say if he was shocked or surprised. He was laughing a little. 'You have grown like a man and you want a small toy at this age?'. It was a casual question but it hurt me inside. I said 'Alright fine' and turned back. Something told me that my father would definitely buy me as he cannot see me feel like that. That weekend, my father had to go for a two days camp to some place and he came back on a early morning.
I stealthily went to his room and searched his bag when he was sleeping. I checked his table and his cupboard. Alas! There was no toy. Disappointment. Frustration. Upset. I went back to my room and promised never to ask anything and talk to my dad for some days. It was bright and sunny outside and i went out and sat outside the home thinking of something else. Dad called me from inside. I went to his room as a silent boy and stood there without talking. My father took the small packet from underneath the bed and opened it. It was a small red soldier, exactly what i asked. I forgot all my feelings earlier and thought inside 'my dad is the best dad in the world.'
Happy time started for me and i started playing with it for years.
Yes, I am little embarassed to say that it all happened when i was 13 years old. But what to do? The child inside my heart is still alive. Waiting for my kid so that I can be with toys once again. :)
Monday, November 1, 2010
Friday, September 10, 2010
நெஞ்சம் மறப்பதில்லை - பாகம் ஐந்து
கொறஞ்சது அம்பது பேர் இருந்திருப்பாங்க அந்த எடத்துல. அசோக் அடிக்க ஆரம்பிச்சதும் கூட்டம் சிதரி நகர்ந்துச்சு. சண்ட போட இடம் விட்ட மாதிரி இருந்தது. சண்ட போடும் மக்கள் தனி தனியா பிரிஞ்சாங்க. சண்டையல நடந்த எல்லாத்தையும் நா பாக்கல. சோ நான் பாத்து ரசிச்ச விஷயங்கள சொல்றேன்.
நிஜமான சண்டை நாம பாக்கற சினிமா சண்டை மாதிரி துளி கூட இல்ல. ரெண்டு ஆள் சண்ட போடறாங்கன்னா அதுல முதல் ஆள் கெட்ட வார்த்த சொல்லி இன்னொரு ஆள அடிக்கற மாதிரி கை வீசுவான். இல்ல உதைக்க ட்ரை பண்ணுவான். அடிச்சு முடிச்சதும் பயத்துல கொஞ்சம் பின் வாங்குவான். இந்த டைம ரெண்டாவது ஆள் பயன்படுத்தி அவன் அடிக்க ஆரம்பிப்பான். இப்படி சண்டை மெதுவா நடக்கும். ஆனா அடி காட்டு அடியா விழும். கண்ண மூடிகிட்டு கைய சுத்துவாங்க. தெரியாம நம்ம மேல பட்டா செம வலி வலிக்கும். அப்படி தான் எங்க சண்ட போய்கிட்டு இருந்தது....
இதுல நடந்த காமெடிகள் ஒண்ணுன்னா சொல்றேன். (மேல படிக்கறதுக்கு முன்னாடி நெஞ்சம் மறப்பதில்லை - பாகம் ஒன்று மறுபடியும் படிச்சிகோங்க. அப்போ தான் எப்படி பட்ட ஆள் சண்டை போடும் போதும் எப்படி இருந்தான் அப்படின்னு தெரியும்)
அசோக் ஒரு சீனியர் கூட சண்டைக்கு தயாரா நின்னான். ஒரு அடி விழுந்துச்சு. அசோக் தன்னோட லொட்ட கைய மடக்கி குத்து விட ரெடியா நின்னான். அப்போ அந்த பக்கம் வந்த அமர் அசோக்க காப்பாத்த கூட வந்து நின்னான். வந்து நின்னது தப்பு இல்ல. ஆனா வந்த டைம் சரி இல்ல. அசோக் கண்ண மூடி சுத்தி அடிக்க வந்த நேரம் அமர் குறுக்க வந்துட்டான். அடி அமர் மேல பட்டு ரத்தம வந்துடுச்சு. அசோக்க்கு அப்போ யார அடிச்சோம் அப்படி எல்லாம் யோசிக்க டைம் இல்ல. அடுத்த அடி அடிக்க வலது கைய சுத்தினான். அந்த சைடு ஆபிரகாம் மேல விழுந்தது ... கடைசி வரைக்கும் அவன் ஒரு அடி கூட சீனியர அடிக்கல. பக்கத்துல இருந்த எங்க பசங்களையே மாத்தி மாத்தி அடிச்சி இருக்கான். மான் கராததே மாதிரி எதோ புது டெக்னிக் போல.....
இன்னொரு பக்கம் நம்ம felix. தெலுகு ஹீரோ மாதிரி தொண்ட கிழிய 'டேய்ய்ய்ய்...' அப்பிடின்னு விரல் நீட்டி கத்தினான். சீனியர் அவன் கத்தினத மதிக்கவே இல்ல.... 'பொலிச்...' ன்னு ஒரு அறை விழுந்தது felixkku. Felix தன்னோட கன்னத தடவி விட்டுட்டு மறுபடியும் 'டேய்ய்ய்ய்...' ன்னு கத்தினான். 'பொலிச்...'. இன்னொரு கன்னத்துல அறை. அப்பவும் அவன் நிறுத்துல. சண்டைக்கு நடுவுல நடுவுல felix விடர 'டேய்' சவுண்ட் கேக்கும். நாங்களும் 'நம்ம பையன் சரியான அடி அடிச்சிட்டான் போல' அப்படின்னு பாப்போம்.....ஆனா நாங்க பாக்கும் போது எல்லாம் felix அடி வாங்கிட்டு தான் இருந்தான். ஒரு கட்டத்துல அவன கீழ போட்டு மிதிசசிகிட்டு இருந்தான் ஒரு சீனியர். ஒரு மிதி வாங்கி தரைல படுத்ததும் நம்ம ஆளு கை ஊனி எழுந்துக்க பார்பான். உடனே ஒரு மிதி விழும். மறுபடியும் தரைக்கு போய்டுவான். மறுபடியும் எழுந்துக்க பாப்பான். மறுபடியும் உதை. தூரத்துல இருந்து பாக்க அவன் என்னோவோ சண்டைக்கு நடுவுல தண்டால் எடுத்துகிட்டு இருந்த மாதிரி இருந்தது.
பேய் கத பிரபு அண்ட் மகாராஜன் கோ ஒரு டெக்னிக் யூஸ் பண்ணாங்க. பிரபு ஒரு சீனியர் கூட சண்ட போடும் போது மகாராஜன் நல்லவன் மாதிரி அந்த சீனியர தடுப்பான். 'சண்டை வேணாம்...அடிக்காதீங்க' அப்படின்னு தடுக்கற மாதிரி கைய பிடிச்சி பின்னால மடக்கி ஆள பிடிச்சிடுவான். அதுக்கு மேல சீனியர் நகர முடியாது. அந்த டைம பிரபு பயன்படுத்தி சீனியர போட்டு அடி பின்னிடுவான். இப்படியே ரெண்டு பேரும் ஏமாத்தி ஏமாத்தி சீனியர அடிச்சிக்கிட்டு இருந்தாங்க.
கார்த்தி சண்ட ஆரம்பிக்கும் போது எங்க கூட இல்ல. சண்ட நடக்கும் போது தூரத்துல தண்ணி குடிச்சிட்டு இருந்தான். சரி குடிச்சிட்டு வருவான்னு பாத்தா ரிவர்ஸ் டைரக்ஷன் ல திரும்பி மெஸ் உள்ள போய்ட்டான்.
மத்தபடி சண்டை சாதரணமா போயிட்டு இருந்தது. அவங்க எங்கள அடிக்க...எங்கள அவங்க அடிக்க....கெட்ட வார்த்தைகள் காத்துல மிதந்தது. தப்பி தவறி எங்க பசங்க அடிச்ச கொஞ்ச அடி அவங்க மேலயும் பட்டு இருந்தது. நல்ல வேலையா சுரஜ் போய் எங்க IT department HOD ய கூட்டிட்டு வந்தான். சண்டை நிறுத்தப்பட்டது. HOD இன்னும் கொஞ்ச staffs கூட கூட்டிட்டு வந்தாரு. எல்லாரையும் தன்னோட ரூமுக்கு கூட்டிட்டு போனாரு. எங்களுக்கு எல்லாம் எங்க HOD வந்ததுல நிம்மதி. அவரு எப்பவும் எங்க சப்போர்ட் தான்.
கூட்டிகிட்டு போகும் போது எதிர்ல CSE department நியூட்டன் சார் அசோக்க பாத்தாரு. டக்குனு அசோக் தன்னோட முகத்த பாவமா வச்சிகிட்டான். நியூட்டன் சார் எங்க HOD ய பாத்து 'சார், இவன எல்லாம் ஏன் சார் கூட்டிகிட்டு போறீங்க... இவன பாத்தா சண்ட போடறவன் மாதிரியா இருக்கு?' அப்படின்னு கேட்டுட்டாரு. நானும் felixum மாறி மாறி பாத்துகிட்டோம். 'மொத்த சண்டையும் இந்த நாயால தான் வந்தது. இவன போய் நல்லவன்னு நினைக்குறாங்க' அப்படின்னு நெனச்சிகிட்டோம்.
ரூம் போன உடனே HOD கூல் ஆகிட்டாரு. எங்களுக்கு உணர்ச்சி வர ஆரம்பிச்சது. 'சார் பாருங்க சார் ரத்தம் வர அளவுக்கு அடிச்சி இருக்காங்க' அப்படின்னு அமர் தன்னோட கைய காட்டினான். HOD ச்சு..ச்சு.. ச்சு ன்னு உச்சு கொட்டினார். உடனே ஒரு சீனியர் 'சார் இங்க பாருங்க...எனக்கும் அடி விழுந்து இருக்கு' அப்படின்னு கழுத்து கிட்ட காமிச்சான். 'அங்க என்ன யா இருக்கு.. வெறும் அழுக்கு தான் இருக்கு' அப்படினு சொல்லிட்டாரு HOD.
அப்படி இப்படி பேசி எல்லாரும் வார்னிங் வாங்கிட்டு வெளிய வந்தோம். அப்போ தான் அமர் கைல ரத்தம் வந்தத அசோக் பாத்தான். 'எப்படி டா ரத்தம் வந்தது' அப்பாவியா அசோக் கேட்டான். 'டேய்...அடிச்சதே நீ தான் டா' சொன்னா அசோக் நம்பவே இல்ல. ஆனா அன்னிக்கு நடந்த விஷயத்துல highlight கார்த்தி குடுத்த explanation thaan. 'மச்சா...சண்ட எப்போடா நடந்தது....நா தண்ணி குடிச்சிட்டு இருந்தேன் டா....அதனால கவனிக்கல'
முற்றும்
நெஞ்சம் மறப்பதில்லை - பாகம் நான்கு
காலேஜ் மெஸ். எப்போவும் ஒரே சத்தமா இருக்கும். நண்பர்கள். அரட்டை. இடம் பிடிக்க சண்டை. தாவி குதித்து ஹீரோயிசம் காட்டுவது. நமக்கு பிடிக்காத காய்கறிகளை மத்தவன் தட்டுல கொட்டுவது. இன்னிக்காவது பெரிய பீஸ் சிக்கன் கிடைக்குமா என்று வழி மேல் விழி வைத்து காத்து இருப்பது. ஒரே கலகலப்பா இருக்கும்.
நாங்க (அசோக், நான், சூரஜ், ஆபிரகாம்) ஒரு எடத்துல செட்டில் ஆனோம். வழக்கமான எடம் பிடிச்சோம். வழக்கம் போல அரட்டை அடிச்சோம். வழக்கம் போல ஆபிரகாம் அடிச்சோம். (போர் அடிச்சா ஆபிரகாம அடிக்கறது எங்க வழக்கம்). ஆனா வழக்கத்துக்கு மாறா எதிர் சீட்ல சீனீயர்ஸ் கூட்டம். வரிசையா ஒரு பதினஞ்சு இருவது பேர் இருப்பாங்க...அதுல ஒருத்தன மட்டும் நல்லா அடையாளம் தெரிஞ்சது. வேற யாரு... எங்க கிட்ட கொஞ்ச நேரம் முன்னாடி friendlya பேசிட்டு போன சீனியர் தான் இப்போ ஆள் கூட்டிகிட்டு வந்து இருக்கார்.
எங்களுக்கு ஏனோ பயமா இல்ல. பிரச்சனைன்னு மட்டும் தெரிஞ்சது. விளையாட்டா இருந்தோம். அசோக் 'நா இல்ல இந்த பசங்க தான்' அப்பிடின்னு செய்கையாலேயே எங்கள மாட்டி விட்டான். இதுல நம்ம சைடுல ஆளுங்க கம்மியா இருக்காங்களே ன்னு எனக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை வேற... 'நம்ம கிட்ட ஆளுங்க இல்லையா' அப்பிடின்னு எங்கெங்கயோ உக்காந்துகிட்டு இருந்த எங்க கிளாஸ் பசங்கள கூப்பிட்டு பக்கத்துல உக்கார வெச்சிகிட்டேன். பிரபு, சிவா, மகாராஜன், அமர்நாத், felix, சதீஷ் இன்னும் கொஞ்ச பேர் வந்து எங்களோட சைடு உக்காந்துகிட்டாங்க.
நண்பர்கள் கூடிட்டாங்க இல்ல....ஒரே காமெடி தான். எல்லார்கிட்டயும் நடந்த விஷயத்த சொன்னோம். 'வரட்டும் டா. என்ன பிரச்சனையானாலும் பாத்துக்கலாம்'. Felix சட்டை கையை மடிச்சிகிட்டே சொல்லிட்டு என்னோட சிக்கன் பீஸ்ல கை வெச்சான். 'அய்.. ஓடி போடா நாயே' ன்னு புடுங்கி வெச்சிக்கிட்டேன். 'மச்சி பேசாம நாமளே அசோக அடிச்சிடலாம்...அவனுங்க பாவப்பட்டு போய்டுவாங்க....எனக்கும் ரொம்ப நாள் காண்டு அவன் மேல' அமர் அவனோட ஆசைய சொன்னான். 'ஜீவா கடைசி ஆசை எதாவது இருந்தா சொல்லுடா... நா நிறைவேத்தி வைக்குறேன்' அசோக் என்னை நக்கலடிசான். 'மச்சா பாரு டா அவனுங்க எக்ஸ்ட்ரா ரைஸ் வாங்கி சாப்பிடறாங்க....பலமா அடி விழும்னு நினைக்குறேன். நம்மளும் நிறைய சாப்பிடலாம் டா. அடி வாங்கணும் இல்ல' ஆபிரகாம் கவலை அவனுக்கு. என்னோட கவலை எனக்கு. 'அசோக்கு, உனக்கு எதாவது ஒண்ணு ஆச்சுனா வருத்தபபடாதே. உன் பிகர நான் பாத்துக்குறேன்.'
பேசிக்கிட்டே மெதுவா சாப்பிட்டோம். மெதுவா சாப்பிட்டா சீனியர்ஸ் பொறுமை இழந்து எழுந்து போய்டுவாங்க அப்பிடின்னு எங்க க்ரூப்ல எவனோ ஐடியா குடுத்தான். உஹும். அவங்க இன்னிக்கு எங்கள ஒதைக்காம நகரறதா இல்லன்னு முடிவோட வந்து இருந்தாங்க.....சரி எவளோ நேரம் தான் வெறும் தட்ட பெசஞ்சி சாப்பிடற மாதிரி நடிக்குறது. எல்லாரும் கெளம்பினோம். அவங்களும் பின்னாடியே வந்தாங்க. கை கழுவிட்டு நாங்க கெளம்பும் போது குறுக்க வந்து நின்னாங்க.
மாடு மாதிரி ஒரு சீனியர் 'என்னடா பிரெச்சன' அப்பிடின்னு கேட்டான். அந்த classic momenta என் வாழ்நாள்ல நா மறக்கவே மாட்டேன். சத்தியமா எனக்கு பயம் வந்துடுச்சு...ஆனா நம்ம அசோக் அப்போவும் கூலா இருந்தான். 'என்னது பிரச்சனையா?' ன்னு கேட்டுட்டு எங்க பக்கம் திரும்பி 'டேய் என்னடா பிரச்சனை?' அப்படின்னு சிரிச்சிக்கிட்டே கேட்டான். எங்க எல்லாருக்கும் சிரிப்பு வந்துடுச்சு. பட் இந்த ஜோக்க சீனியர்ஸ் ரசிக்கல. எட்டி ஒரு உதை விழுந்துச்சு அசோக்குக்கு. தடுமாறி எங்க மேல விழுந்தான். கோவமா F letter worda தமிழ்ல கத்திகிட்டே எழுந்து அந்த சீனியர் மேல பாஞ்சான்.
The epic battle began.
பின் குறிப்பு : ரொம்ப இழுக்கறேன்னு நெனைக்குறேன். என்ன பண்றது? டைம் இல்ல. Next part will be the final part.
Saturday, August 21, 2010
நெஞ்சம் மறப்பதில்லை - பாகம் மூன்று.
அன்னிக்கு ஒரு நாள். காலேஜ் பிரேக் டைம். பட்ட பகல். உச்சி வெயில். சேர்மன் ரௌண்ட்ஸ் வர நேரம். நாங்க எல்லாரும் கேன்டீன்ல பப்ப்ஸ் சாப்டோம். அன்னிக்கு சம்பவம் நடக்கல.
சம்பவம் என்னிக்கு நடந்ததுன்னா......
அன்னிக்கு ECE டிபார்ட்மென்ட் symposium. அவங்க எல்லாம் ஒரே பிஸி. நாங்க எல்லாம் வழக்கம் போல ஒரே வெட்டி. லஞ்ச் டைம்ல நான், அசோக், சூரஜ், ஆபிரகாம் எல்லாம் சாப்பிட போய்ட்டு இருந்தோம். ஸ்டெப்ஸ் எறங்கி கீழ வந்துட்டு இருந்தப்ப நம்ம ECE நண்பன் ராஜேஷ் கெலத் யாரோ ஒரு சீனியர் கூட பெஞ்ச் தூக்கிட்டு மாடி ஏறிக்கிட்டு இருந்தான். சரி நம்ம பையனாச்சே அப்படின்னு பேச்சு குடுத்தோம்.
'என்னடா ராஜேஷ். பெண்டு கழலுதா?'
'விட்றா இன்னிக்கு ஒரு நாளாவது வேல பாக்கட்டும்'
' மச்சா ஹெல்ப் ப்ளீஸ்... இந்த பெஞ்ச கொஞ்சம் மேல தூக்கிட்டு போங்கடா' ராஜேஷ் உதவி கேட்டான்.
'மச்சி உன் பிரச்சனை எனக்கு புரியுது... இருந்தாலும் எங்களுக்கு அத விட முக்கியமான பிரச்சனை இருக்குடா... வயத்து பிரச்சனை....வயத்து பிரச்சனைய விட இந்த உலகத்துல வேற எந்த பிரச்சனையும் பெரிய பிரச்சனை எதுவும் இல்லடா. அத மொதல்ல கவனச்சிடு வரோம்'
ராஜேஷ் & சீனியர் பெஞ்ச தூக்கிட்டு கஷ்டப்பட்டு நிக்கிற நேரத்துல கூட மரண மொக்க போட்டேன்.
கூட வந்த ECE சீனியர், நாங்க எல்லாம் ECE டிபார்ட்மென்ட் ஜுனியர்ஸ் அப்பிடின்னு நெனச்சிட்டான். சுர்ர்ருன்னு டென்ஷன் ஏறிடுச்சு தலைவருக்கு.
'டேய்...தூக்கிட்டு போங்கடா னா கேக்க மாட்டீங்களா? மரியாதையா எடுத்துகிட்டு போங்கடா'
'சாரி பாஸ்... நாங்க எல்லாம் மரியாதை தெரியாத பசங்க' அப்பிடின்னு சொல்லிட்டு நாங்க நடக்க ஆரம்பிச்சிட்டோம்.
என்னடா ஜுனியர் பசங்க நம்ம பேச்ச கேக்க மாட்டறாங்களே அப்பிடின்னு அவருக்கு இன்னும் டென்ஷன் ஆய்டுச்சு. பெஞ்ச கீழ வெச்சிட்டு நேரா வந்து எங்கள மடக்கினான். 'உன் பேரு என்ன டா? பேர சொல்லுங்க' அப்பிடின்னு மிரட்ட ட்ரை பண்ணான்..... முடியுமா?
'நான் ஜார்ஜு புஷ்...இவர் சதாம் உசேன்... அவரு நெல்சன் மண்டேலா...பாருங்க மண்டைய பாத்தாலே தெரியுது' அப்படின்னு அசோக் சைடுல ஆபிரகாம சேர்த்து கலாய்ச்சான். சீனியர்க்கு உச்ச கட்ட கோவம். அசோக் ID Carda புடுங்க ட்ரை பண்ணான்.
இந்த இடத்துல எங்க ID கார்டு பத்தி சொல்லியே ஆகணும். காலேஜ்ல ID கார்டு எங்களுக்கு தாலி மாதிரி. காலேஜ் Professors பாடம் நடத்தி எங்க தாலிய அறுப்பாங்க. கிளாஸ்க்கு வெளிய பிரச்சனை பண்ணா நடுவீதியில சீனியர்ஸ், professors..சேர்மனோட அள்ளககைs யாரு வேணும்னாலும எங்க தாலிய அறுக்கலாம். ஷேவ் பண்ணல...முழுக்கை சட்டை போடல...சொல்ற பேச்ச கேக்கல இப்படி எதுக்காக வேணும்னாலும் உங்க தாலி பறிபடலாம். இந்த மாதிரி தாலிய அறுத்துக்கிட்டு போய் மார்வாடி கடைல அடகு வெக்குற மாதிரி அக்கௌன்ட்ஸ் ஆபீஸ்ல குடுத்துடுவாங்க... நாங்க போய் வட்டி கடற மாதிரி fine கட்டி திருப்பி வாங்கிட்டு வரணும்
Back to the சம்பவம்....
நாங்க எல்லாம் சீனியர பிடிச்சி ஒதுக்கி விட்டு 'ID card மேல கைய வெக்காத... உங்க டிபார்ட்மென்ட் symposium க்கு நாங்க எதுக்கு பெஞ்ச தூக்கணும்...' அப்பிடின்னு கொஞ்சம் பக்குவமா மரியாதையோட நாலு கெட்ட வார்த்தை பேசி அனுப்பி விட்டோம். சீனியர் மொரச்சிக்கிட்டே போய்ட்டான். நாங்க எங்க வயத்து பிரச்சனைய கவனிக்க போய்ட்டோம்.
அப்போ நாங்க எதிர்ப்பாககல...பிரச்சனை பெரிசாகும்னு....
Wednesday, August 11, 2010
நெஞ்சம் மறப்பதில்லை - பாகம் இரண்டு.
பெலிக்ஸ்...தமிழ்ல சரியா வரல. Felix - ஸ்டைல் பையன். First year ல இவன் வேற section. எங்க காலேஜ்ல செல்போன் கொண்டு வர கூடாது அப்பிடின்னு ஒரு ரூல் இருந்தது. எங்க கிட்ட அப்போ எல்லாம் செல்போனே கெடயாது. ஆனா அந்த காலத்துலேயே இவன் நோக்கியா 2100 கொண்டு வருவான். Coolers, bike, watch, hairstyle, dance எல்லாம் ரிச்சா இருக்கும். எல்லாம் Baap ka paisa. ஆனா வாய தொறந்தா ஒரு கூவம் ஆறே ஓடும். கெட்ட வார்த்தைகள் சரளமா வரும். ராயபுரம் ஏரியா வேற. சோ பெரிய ரவுடி அப்பிடின்னு நான் நெனச்சிட்டேன். Third year ல நான் அசோக் felix மூணு பேரும் ஒரே பெஞ்ச். அப்போ இவன் எங்க கிட்ட வாங்காத அடியே கெடயாது. நம்ம கார்த்தி நாய் சேகர் மாதிரினா Felix கை புள்ள மாதிரி.
கோச்சிகாதடா Felix. உனக்கு மன வலிமை ஜாஸ்தி(building strong), ஆனா உடல் வலிமை கம்மி. (basement weak). இவன் கிட்ட மறக்க முடியாத சம்பவங்கள், காலேஜ் சேர்மன் செல்போன் raid வந்தப்போ ஜட்டிகுள்ள செல்போன் ஒளிச்சி வெச்சது, பிரம்மா சார் கிட்ட வம்பிழுத்து அவர மெஸ் ல இருந்து அழுதுகிட்டே ஓட வெச்சது. 'As i am suffering from stomach ache, i want to goto the restroom' அப்பிடின்னு லெட்டர் எழுதி சார கலாய்ச்சது...டூர் போனப்ப யாரையும் தூங்க விடாம இவன் பண்ண கலாட்டாக்கள்...மற்றும் பல.
பிரபு... இட்ட பேரு பிரபு...பட்ட பேரு பேய் கதை. ஏன் அந்த பேரு வந்ததுன்னு தெரியாது. ஆனா இவன பிரபு அப்பிடின்னு யாருமே கூப்பிட்டது இல்ல.
நல்ல பாடகன். ரொம்ப நல்லா பாடுவான். லாஸ்ட் பெஞ்ச் ல ஒகாந்திகிட்டு ரேடியோ ஸ்டேஷன் மாதிரி பாடுவான். நேயர் விருப்பம் கேட்டு அவங்க கேக்கற பாட்ட பாடுவான்....நடுவுல 'வஜ்ரதந்தி....வஜ்ரதந்தி வீக்கோ வஜ்ரதந்தி' மாதிரி 'முனியமமா தேன் மிட்டாய்' அப்பிடின்னு மாத்தி விளம்பரம் வேற பாடுவான். இவன் கூட இருந்தா சிரிச்சிகிட்டே இருக்கலாம். அடிதடிக்கு பயப்பட மாட்டான். ஒரே ஒரு ஜூனியர் பையன அடிக்க 14 பேர கூட்டிகிட்டு போய் ஏரியாவயே கலக்கிட்டு வந்தான்.
ஆபிரகாம் - காதல் மன்னன். ஆனா எல்லாம் failure தான். ஒரு நாள் பாத்தா 'அந்த பொண்ணு என்ன ஏமாத்திட்டா டா..எப்படி எல்லாம் இருந்தோம் தெரியுமா' அப்பிடின்னு 'ஒ'ன்னு அழுவான். அப்புறம் ஒரு மாசம் நல்லா இருப்பான். அடுத்த மாசம் பாத்தா 'இந்த பொண்ணு என் மனச புரிஞ்சிக்கவே மாட்டேன்றா' அப்பிடின்னு அழுவான். எங்களுக்கு சிரிப்பா இருக்கும். இவனோட செல்ல பேரு 'மாடு'. வெறி பிடிச்சா முட்ட ஆரம்பிச்சிடுவான்.
இவன் அப்பா கஸ்டத்துல இருக்கார்....சாரி கஸ்டம்ஸ் ல இருக்கார். அதனால இவன் எது வெச்சி இருந்தாலும் அது அவங்க அப்பா குடுத்ததா இருக்கும். கேட்டா என் கசின் gifta குடுத்தது அப்பிடின்னு ரீல் விடுவான்.
அப்புறம் நான் - இந்த கதைக்கும் இவனுக்கும் சம்மந்தம் இல்ல....ஆனா இவனால தான் இந்த கதையே...(குஷி ல SJ Surya வுக்கு குடுத்த இன்ட்ரோ எனக்கு)
சரி.....நாம சம்பவத்துக்கு போவோமா?
Sunday, August 8, 2010
நெஞ்சம் மறப்பதில்லை. பாகம் ஒன்று
சமீபத்துல தான் Five point someone புக் படிச்சேன். தன்னோட கல்லூரி வாழ்க்கைல நடந்த விஷயத்த சாதரணமா சொல்லி இருக்காரு Chetan Bhagat. படிச்சி முடிச்சப்பவே நான் முடிவு பண்ணிட்டேன். நம்மளும் இது மாதிரி ஏதாவது எழுதணும் அப்படின்னு.
எழுதணும் அப்படின்னு முடிவு பண்ண உடனே எனக்கு மனசுல தோணின சம்பவம் எங்க பசங்க சீனியர் பசங்க கூட போட்ட சண்ட தான். ஒரு மாசம் கழிச்சி இப்போ தான் டைம் கிடைச்சி இருக்கு. Fulla சொல்ல முடியாது.Part parta சொல்றேன். இதுல ஹீரோ வில்லன் எல்லாம் கெடயாது..எல்லாருமே காமெடியன் தான். அதே மாதிரி சண்ட அப்படின்னு சொன்னவுடனே எதோ figure பிரெச்சனை ragging பிரெச்சனை அப்படின்னு நெனச்சிடாதீங்க. அதெல்லாம் புனித போர். நாங்க போட்டது சப்ப மேட்டருக்கு சண்ட. சரி கதைக்கு போவோம்.
இந்த பாகம் character intro.
எங்க காலேஜ் gang ஒரு உருப்புடாத gang. எவனுமே படிக்கிற பசங்க கெடையாது. சூரஜ் தவிர. ரவுடி பசங்க....(அப்படின்னு ஒரு இமேஜ் கிரியடே பண்ணி வெச்சி இருந்தோம். But அன்னிக்குதான் எல்லாரும் எவ்வளோ பெரிய ரௌடிங்க அப்டின்னு தெரிஞ்சது. இந்த கதையோட கடைசில நீங்களும் தெரிஞ்சிக்குவீங்க.
அசோக்-என்னோட் பெஸ்ட் வொர்ஸ்ட் நண்பன். கண்ணன் காலனி பையன் அப்பிடின்னு தெரிஞ்சதும் பர்ஸ்ட் இயர்ல சீனியர்ஸ் கூட இவன rag பண்ணல. ஏரியா அந்த மாதிரி. ஒண்ணும் தெரியாத மாதிரி மூஞ்ச வச்சிகிறது இவனுக்கு கை வந்த கலை. ஆனா பெரிய கேடி. ஒரு தடவ யூனிட் டெஸ்ட்ல டெஸ்க்க்கு கீழ புக் வெச்சி காப்பி அடிக்கறதுக்காக பிளான் பண்ணி இருந்தான். சார் வந்து டெஸ்க் டெஸ்க்கா ரௌண்ட்ஸ் வந்து இவன் டெஸ்க் கீழ புக் இருக்கறத கண்டு பிடிச்சிடாரு. புகக எடுத்துகிட்டு ஸ்டாப் ரூம் போய்ட்டாரு. பையன் புயல் வேகத்துல ஸ்டாப் ரூம் போனான். சார் இவன திட்ட ஆரம்பிச்சு பத்து செகண்ட் தான் ஆயிருக்கும். அதுக்குள்ள பையன் plate a திருப்பி போட்டான். 'சார் நான் காப்பி அடிச்சத நீங்க பாத்தீங்களா? எவனோ புக் வெச்சி என்னை மாட்டி விட பாக்கறான். லேடீஸ் ஸ்டாப் முன்னாடி இப்படி பேசினீங்கனா அவங்க என்னை பத்தி எனன நெனைப்பாங்க? அனாவசியமா ஒரு அப்பாவி மேல பழி போடாதீங்க' அப்படின்னு ஒரு சீன போட்டான் பாருங்க......நானே 'ஒரு வேலை நெஜமாவே இவன் காப்பி அடிக்கல போல இருக்கே.' அப்பிடின்னு நெனச்சிட்டேன். இன்னும் கொஞ்ச நேரம் நல்ல திட்டிட்டு பேப்பர் எல்லாம் பறக்க ஸ்டாப் ரூம் விட்டு போய்ட்டான். சார் கலங்கி போய்ட்டாரு. 'நான் என்னப்பா தப்பா கேட்டுட்டேன்' அப்படின்னு அழாத குறையா ஆயிட்டாரு..கிளாஸ் ரூம் போய் பாத்தா இந்த நாய் சிரிச்சிகிட்டு இருக்கு. இவளோ சண்டைலையும் கரெக்டா சார் கொண்டு போன புகக திருப்பி சுட்டுகிட்டு வந்துட்டான்.
கார்த்தி- குட்டி Body builder, Keyboard player. singer, dancer......இவ்வளோ characters இருக்கறதுனால இவன் பெரிய ஹீரோ அப்பிடின்னு நெனச்சிடாதீங்க. சரியான காமெடி பீஸ். சுருக்கமா சொல்லனும்னா நம்ம நாய் சேகர் மாதிரி. வாய் உதார் ரொம்ப ஜாஸ்தி. 'ஒரு ஆளு கைய அரிவாளால வெட்டிட்டு ஜெயில்ல இருந்தேன்' அப்பிடின்னு ஒரு பரபரப கெளப்பி விட்டுடுவான். லைட்டா நோண்டி கேட்டா 'வெட்டல...அரிவாள் கை தவறி அவன் மேல விழுந்துடுச்சு' அப்பிடின்னு சொல்லுவான். இன்னும் நோண்டி கேட்டா 'அரிவாள் இல்ல...குச்சியால அடிச்சேன் அப்பிடின்னு நெனைக்குறேன். கோவமா இருந்தேன் இல்ல? கைல என்ன இருந்ததுன்னு ஞாபகம் இல்ல' அப்பிடின்னு லெவல் குறைசசிகிட்டே போவான். சரியான டுபாக்கூர் fellow.
Felix, prabhu பத்தி அடுத்த தடவ சொல்றேன்.
இப்போ......தொடரும்......
Sunday, July 25, 2010
SameTime Comedies
Comedies like these keeps office life going.....
While chatting, we send suitable emoticons that make it even funnier.
Now, Statutory warning, these are occupational humors.(?). Some of them are PJs. So only people who are working in same environment like me will understand it.
Chat Instance 1:
Person 1: This whole thing of building the code and deploying is cooking my brain
Person 2: My brain is already cooked and my manager is eating it.
Person 1: Boiled or Fried?? ;)
Chat Instance 2:
Person 1: I will give you call. Right now i am having lunch.
Person 2: same here
Person 1: Wide men eat alike :)
Person 2: Are you wide? :)
Person 1: lol...Typo. I meant Wise men
Chat Instance 3:
Person 1: Alright, I am going to build the code and deploy it now.
Person 2: In the new server box?
Person 1: Yes, your own box.
Person 2: My own? Can i take it home? ;)
Chat Instance 4:
Person 1: Once the kit is built, we will deploy it tonight.
Person 2: Alright folks, Its 5 pm, Gotta go and pick up my kits from school.
Person 1: :) You mean Kids right?
Chat Instance 5:
Person 1: Person 2, Can you please check this?
Person 2: Sure. One sex
Person 2: One sex*
Person 2: Sorry, One sec*
Chat Instance 6:
American client: Person 2, check this and send me a detailed email.
Person 2: ssabaa...Manda kayuthe....
American client: what?
Person 2: Sorry, wrong window.
There are other embarassing moments.
1) Once, I was in a war room, there was conference call going from morning to evening. Many people across many states joined the conference call. We were all checking something and waiting for the end user's response on how our application is.
So there was a momentary silence. That time, some one went to the toilet with his phone and starting peeing. Poor fellow, he forgot to put his phone on mute. The water sound was echoing in the conference call. Everyone started laughing. My sweet client announced in the conference call. 'Can whoever is peeing right now go on mute please?'. Then came the toilet flushing sound.
2) It was a gettogether and my friends were chatting and making fun of their managers. Meanwhile, one friend wanted to update something to his PM and called. PM didnt pick up his phone. At the fourth ring, my friend thought his manager is not picking up and kept the phone on table and started mocking his manager and making fun of him. We were all laughing our ass off.
The next day, my friend's manager called him and played his voice message to my friend. The whole conversations he made to us about this PM the previous day were recorded. My poor friend did not cut his phone last night when he called his manager and it all went to manager's voice mail. :)
Cheers,
--Dear! Jap Evans
Subscribe to:
Posts (Atom)