Wednesday, September 20, 2023

Dad Joke or Bad Joke

(While going to a store in car)

Arjun: Appa, paatu podunga.. 
Me: Okay.. (singing) Baa baa black sheep, have you any wool
Arjun: Nooo.. Intha paatu ila
Me: Okay, bee bee black bee, have you any wool?
Arjun: Noo.. Tamil paatu.
Me: Meh, meh, aatukutty kambali iruka? 
Arjun: Nooooo.. Stop singing
Me: nee thaane paatu paada sonne.. '
Arjun: Noo.. Paatu "podunga"
Diya: Appa kita correct a enna venum nu sollu.. Illa naa ipdiye pesitu iruka poraanga
Arjun: (stern voice) Appa.. Paatu venum
Me: Sure.. Enna maathiri pot venum? Round a venuma ? Long a venuma? 
Diya: (sighs) I give up appa
Me: Yes, you have to give UP. Naa unna vida tall illa? I can only give down. 
Arjun: apppaaa… 
Diya: Nee epdi sonaalum appa ethavathu maathi sollikite iruka poraanga. 
Me: Correct a enna venum nu sonna naa seiven. 
Arjun: (after thinking well) Appa, I want to listen to songs from the car when you play it in the speakers. 
Me: ohhhh…. Now I get it. Why didn't you say so? 
Diya: Finally..
Me: Oops, ivalo neram neenga pesi pesi ippo kadaye vanthuduchu. Veetuku pogum podhu kelu, naa podaren. 
Diya: Inniku fulla paate keka poradhu ila. 



நேர்கோணல்


வாசலில் பேப்பர் படித்துக் கொண்டிருந்த கணேசன் கேட் அருகே சத்தம் கேட்க நிமிர்ந்துப்  பார்த்தார். சந்தானம் வந்திருந்தான்.

'குட்மார்னிங்  அங்கிள்...'  

‘வாப்பா சந்தானம். நல்லா இருக்கியா? பாத்து ரொம்ப நாள் ஆச்சு’.

‘என்ன அங்கிள், நேத்து தான கார்த்தி கூட நைட் ஷோ பாத்துட்டு வீட்டுக்கு வரும்போது பாத்தீங்க?’

‘அடிக்கடி வரியே ன்றத தான் அப்படி சொன்னேன்’

‘ஐயோ அங்கிள்... செம்ம கலாய் .. செம்ம கலாய்’

‘என்னடா  நெத்தில பட்ட? நீட்டா டிரஸ் பண்ணிக்கிட்டு? லேகியம் விக்க போறியா?’

 ‘போங்க அங்கிள். என்ன ரொம்ப புகழாதீங்க.’ சட்டை காலரை தூக்கிக் கொண்டான்.

கணேசன் தலையில் அடித்துக்கொண்டார்.

‘கஷ்டம்டா... சரி எங்க பொறபுட்டுட?’

‘இன்டர்வியூ க்கு அங்கிள். வேலைக்கு போகலாம் ன்னு முடிவு பண்ணிட்டேன். அதான் கார்த்தி ய  கூட்டிட்டு போகலாம் ன்னு ’ என்று இழுத்தான்.

‘அவன் இந்த மாதிரி நல்ல விஷயத்துக்கு எல்லாம் வரமாட்டானே ப்பா’

‘அய்யோ அங்கிள். அவன் தான் நேத்து படம் முடிச்சி வரும்போது என்கிட்ட இந்த வாக்-இன் இன்டர்வியூ பத்தி சொன்னான். 'காலைல வாடா. என் பைக்லயே போலாம்' ன்னான்’

‘என்னடா அதிசயம்? இந்த வாரம் வந்த எல்லா படமும் பாத்துடீங்களோ?’

‘அதோ கார்த்தி யே வரானே. டேய். என்னடா பார்மல் டிரஸ் போடாம ஜீன்ஸ் ல வர?’

‘உன்ன டிராப் பண்ண இந்த டிரஸ் போதும் வாடா’

‘என்னது நீ அட்டென்ட் பண்ணலையா?’

‘இன்டர்வியூ அட்டென்ட் பண்றேன்னு நா சொன்னேனா? ட்ராப் பண்றேன்னு தான் சொன்னேன். இஷ்டம் இருந்தா வா. கஷ்டம் இருந்தா பஸ் புடிச்சி போ.’

‘சரி...சரி.. என்ன ட்ராப் பண்ணி எனக்கு வேல வாங்கி குடுத்தேன்னு வெளிய சொல்லிக்கணும். அதான.. வந்து தொல’

‘போய்ட்டு வர்றேன் ப்பா’.. கார்த்தி பைக்கில் அமர்ந்தான்.

‘டேய் கார்த்தி . சந்தானம் கூட போறேன்னு ஆய்டுச்சு. அப்டியே நீயும் அட்டென்ட் பண்ணலாம்ல? வேல கெடைக்கறது எல்லாம் கஷ்டம் டா. உத்தியோகம் புருஷ லட்சணம். நாங்க எல்லாம் அந்த காலத்துல...’

‘ப்பா.... நீங்க பேசிட்டே இருங்க.. தோ போய்ட்டு வந்துட்றேன்’

‘சரி நீ போ. சந்தானம், நா சொல்றது சரி தானே? வேலை தான் ஒருத்தனுக்கு...’

‘அய்யோ அங்கிள். நானும் தானே அவன் கூட போகணும்.’

‘ஆமால்ல. அப்புறம் யார் கிட்ட என்ன பேசிட்டு இருக்க சொன்னான்?’

‘நீங்க தனியா பேசிட்டே இருங்க.. நாங்க ரெண்டு பேரும் மோனைக்கு போய் ஆம்புலன்ஸ் அனுப்புறோம்.நேரா கீழ்ப்பாக்கதுல எறக்கிடுவாங்க.’

‘போங்கடா.. பாத்து போங்க.’

வேந்தன் ஆன்மா

 பண் அமைத்த பாணர்க்கு பொன் கொடுத்தான். 

புண்பட்ட கன்றுக்கு தன் புதல்வனை கொடுத்தான்.


தன் காலம் தாண்டி தமிழ் வாழ கனி கொடுத்தான்.

தொண்டாற்றி தமிழ் பண்பாட்டை உயர்த்தி பிடித்தான்  


கோட்டாலே 3 நாடாக பிரிந்து இருந்தாலும் - தமிழ்க்  

கோட்பாடால் இணைந்தே இருந்தான். 

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய், கேளாரும் கேட்க 

வெண்பாக்கள் திரட்டி சங்கம் அமைத்தான். 


கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வந்த தமிழ் - இன்று 

கல் மறைந்தும் மண் மறைந்தும் கான்கிரீட்டால் புவி நிறைந்தும்  

மரிக்காமல் மறையாமல் நெடுங்காலம் உடன் வாழ 

அன்றே வழி அமைத்தான், உயிர்கொடுத்தான் தமிழ் வேந்தன் 


மண்ணில் தான் மறைந்தாலும், மொழி 

விண்ணை தொட வேண்டுமென அவன் 

கண்ணாக கருத்தாக வளர்த்த தமிழ் இன்று 


நம் வாயில் படும்பாட்டை கண்டாலோ கேட்டாலோ 

வெம்பாமல் இருக்காதோ வேந்தன் ஆன்மா 


ப்ரோ வாக ஜீ ஆக நாம் மாற நாம் மாற 

தோழா-வும், நண்பாவும், காணாமல் தான் போகும்

தேங்க்ஸ் சொல்லி தேங்க்ஸ் சொல்லி நாம் பேச 

நாளாக நாளாக நன்றியும் மறந்து போகும் 

 

நாலடியும் ஈரடியும் நாளடைவில் அழிந்து போக 

"கீழடியில் கிடைத்த"தென இன்றைய தமிழ் ஆய்விடுமோ.


கூடாது கூடாது விழி தமிழா! நினைவில் கொள். 


சந்திராயன் வென்றாலும் நாம் புதன்வாசி ஆனாலும் 

'என் வாழ்வும் என் வளமும் மங்காத தமிழ்' என்று 

அன்றாடம் உரையாடு. எந்நாளும் தமிழ் புகழ் பாடு.

Tuesday, March 21, 2017

என்ன தவம் செய்தனை

இரண்டாயிரத்து பதினாறு தீபாவளி எனக்கு இப்படி அமையும் ன்னு நான் நெனச்சே பார்க்கலை. ஓடி விளையாடறேன் பேர்வழி ன்னு பள்ளத்துல கால விட்டு விழுந்து சிலப்பல எலும்புகள முறித்து சர்ஜரி பண்ணி, இதோ இப்ப வரைக்கும் படுக்கைல தான் கெடக்குறேன்.

என்னடா இவளோ சோகமான செய்தி சொல்லும் போது 'என்ன தவம் செய்தனை' ன்னு டைட்டில் வெச்சி இருக்கேன் ன்னு பாக்கறீங்களா? சொல்றேன் (வேணாம்னா உடவா போறே? அப்பிடின்னு கேக்க கூடாது)

என்ன தான் வலி, வேதனை, இயல்பு வாழ்க்கை பாதிப்பு, குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ன்னு பல விஷயம் இருந்தாலும் இந்த அடியினால எனக்கு புதுசா இருந்த சில விஷயங்கள் இருக்கு. எவ்வளவு விஷயத்துல நா அதிர்ஷ்டம் அடஞ்சிருக்கேன்ன்னு 'கவுன்ட் மை ப்ளஸ்சிங்' பண்றேன்.

முதல் அதிர்ஷ்டமே நா விழும் போது கூடி இருந்த நண்பர்கள். நண்பர் வசந்த் வீட்ல தான் சம்பவம் நடந்தது. நா விழுந்ததும் என்ன தூக்கிட்டு போக நாலு பேரு இருந்ததே பெரும் பாக்கியம். யாரும் இல்லாத எடத்துலயோ  இல்ல எங்க வீட்டுக்கிட்ட விழுந்திருந்தாலோ என்ன பண்ணிருப்பேன் ன்னு எனக்கே தெரியல.

என்னை அலேக்கா தூக்கி சென்ற அன்பு நெஞ்சங்கள் திரு வசந்த், திரு பீக்கே என்கிற பிரவீன் குமார், திரு சுந்தர் மற்றும் திரு நவீன் மற்றும் அவர்கள் குடும்பத்தார். விழுந்த இடத்தில இருந்து வீட்டுக்கும், வீட்ல இருந்து ஹாஸ்பிடல்க்கும் குண்டு கட்டா தூக்கிட்டு போய்டாங்க. 'இதென்னப்பா, யார் வேணா செய்வாங்க' ன்னு சொல்றவங்க  முழு கதையும் கேளுங்க.

இந்த மாதிரி சந்தர்ப்பங்கள்ல நம்ப கூட உறவினர்கள் இருக்கறத்த விட நண்பர்கள் இருக்கறது ரொம்ப நல்லது. டென்ஷன் கம்மி. வலி ல ஒரு கால்ல நொண்டி நொண்டி வரும்போதும் 'பக்கதுல ஐஸ் கிரீம் கடை இருக்கு ஐஸ் கிரீம் சாப்பிடுறியா?' ன்னு (சுந்தர்) கேட்டுட்டு ஒருத்தர ஒருத்தர் பாத்து சிரிச்சிக்க நண்பர்களால தான் முடியும்.
அதே சமயத்துல 'இப்படி நடந்து போச்சே' ன்னு வருத்தப் பட்டு மூஞ்ச உம்முன்னு வெச்சிக்கிட்டாலும்   (வசந்த்) 'ஒண்ணும் ஆகாது, கவலை படாதீங்க' ன்னு சொல்லவும் நண்பர்களால தான் முடியும்.

நண்பர் வீட்டில சம்பவம் நடந்ததாலயும், என் வீடு ஒரு மணி நேரம் தூரத்துல இருந்ததாலயும், வீடு ரெண்டாவது மாடில இருந்ததாலயும் நா வசந்த் வீட்லயும் சுந்தர் வீட்லயும் மாறி மாறி ரெண்டு வாரம் தங்கி இருந்தேன்.

அடிபட்ட முதல் இரண்டு நாள், என் மனைவிக்கு அவ்வளவா என்ன சரியா தாங்கி புடிக்கவோ என் கால தூக்கி சரியா தலையணையில உயர்த்தி வைக்கவோ தெரியல. வசந்த் தான் வலிக்காம நகர்த்தினார். காலைலயும் சாயந்தரமும் முன்ராத்திரியும் உதவிக்கு எப்பவும் இருந்தார். வசந்த் இவ்வளோ தூரம் பண்றது ஆச்சர்யம் இல்ல, எங்களுக்கு அவ்வளோ பழக்கம். ஆனா நவீன் (வசந்தின் மைத்துனர்) எனக்கு மூன்று முறை மட்டுமே பார்த்த, ரொம்ப பரிச்சியம் இல்லாத நபர். இந்தியாவில் இருந்து  ஒரு மாசம் முன்னாடி தான் வந்திருந்தார். அவர் எனக்கு பண்ண உதவிகள் அளப்பரியது. என்ன தூக்கிட்டு போனதுல பாதி வெயிட் அவர் தான் தூக்கிருப்பார். 'நா இங்க தான் ஹால்ல படுத்து இருக்கேன்.. என்ன வேணும்னாலும் கூப்பிடுங்க' ன்னு சொன்னார். சில இரவுகள்ல லைட் எரிஞ்சு அணையும். என்னடா ன்னு பார்த்தா நவீன் வந்து நா நல்லா இருக்கேனா தூங்கறேனா ன்னு பார்த்துட்டு போயிட்டிருப்பார்.

வசந்தின் மனைவி லாவண்யா, என் நீண்ட காலத்து சிநேகிதி, நா அவங்க வீட்ல தங்கி இருந்த காலத்துல என்ன இந்த நிலைமைல பாக்க முடியாம நா இருந்த ரூம் பக்கமே வரல. அப்பபோ நல்ல சூப், கோழி கறி, பேக் பண்ண காய்கறிகள் மட்டும் வந்துகிட்டே இருக்கும். அவங்களுக்கு அந்த டைம்ல உடம்பு முடியல. ஆனா அத வெளிக்காட்டிக்கவே  இல்ல. அப்பறம் குட்டி வசந்த் - இனியா
'ஜீ  மாமா ஜீ  மாமா என்னாச்சு காலுக்கு' ன்னு தினம் நலம் விசாரிக்க வந்துடுவா. ஒரு நாள் கால்ல ஐஸ் பாக் (Ice pack) வெச்சி தூங்கிட்டு இருந்தேன். திடீர்னு யாரோ கால அழுத்துற வலி உணர்ந்து எழுந்து பாத்தா இனியா ஐஸ் பாக்க அமுக்கி squishy squishy ன்னு விளயாடிகிட்டு இருக்கா 😃

சுந்தர் குடும்பத்தார். என் வசதிக்காக அவர் வீட்டு ரூமை பல முறை மாற்றி அமைத்து குடுத்தார். சுந்தர் மனைவி திவ்யாதான் தியா வ முழுதும் பார்த்து கொண்டது. இங்கயும் சாப்பாட்டுக்கு, அக்கறைக்கு பஞ்சமே இல்லை. ஒரு நாள் பெட்ல உட்கார்ந்துகிட்டு தியா க்கு ஊட்டிட்டு இருந்தேன். தியா ஒரு சப்பாத்தி சாப்பிட்டு முடித்திருந்தாள். ரெண்டாவது கேப்போம் ன்னு என் மனைவிய உரக்க அழைத்தேன். அவ சமையல் அறைல இருந்ததால கேக்கல. ஆனா என் குரல் கேட்ட உடனே எனக்கு என்னமோ ஏதோ ன்னு சுந்தர் திபுதிபு ன்னு பாஞ்சு வந்து 'என்னடா ஜீவன்?' ன்னு பாசத்தோட கேட்டார். 'ஒண்ணுமில்ல சுந்தர், சப்பாத்தி தான்' ன்னு  சொன்னேன். ஆனா அவரின் அந்த பதட்டம் பெரிதும் பாதித்தது.

சுந்தரின் பசங்க தான் டைம் பாஸ், எனக்கும் என் மகளுக்கும். 'ரைம்ஸ் போடறீங்களா? ரைம்ஸ் வேணும். இப்பே வேணும்' ன்னு  வம்பு பண்ணிட்டே இருக்கும் கியூட் வசுந்தரா. என்ன பார்க்க கூச்ச பட்டு ஓர கண்ணாலேயே பாத்துட்டு போகும் பெரிய மனுஷன் விஷ்ணு. அப்பறம் அவங்க வீட்ல கெஸ்டா இருந்த, அவர் தங்கி இருந்த அறையை எனக்கு விட்டு கொடுத்து ஹாலில் தரையில் படுத்துக்கொண்ட சுந்தரின் நண்பர் ஹேமந்த். என்னை வீல்சேர் ல உட்கார வைக்க தள்ள உதவி பண்ண தயங்கவே இல்ல அவர்.

அடுத்து பிரவீன் குடும்பம். எனக்கு பேச்சுத்துணைக்கு?? எப்பவும் இருந்தார். ப்ரவீனும் திவ்யாவும் தேடித் தேடி டாபிக் கண்டுபுடிச்சி பேசினாங்க. திவ்யா இன்னும் கொஞ்சநாள் இங்க இருந்திருந்தா ஆட்டுக்கால் சூப் வந்துகிட்டே இருந்திருக்கும். ஆனா பிரவீன், திவ்யா தாய்லாந்து சென்றுவிட்டார்கள்.

இதெல்லாம் நண்பர்கள் செய்தது. பெற்றோர்கள், மாமியார், மாமனார், மகள் மற்றும் கடைசியாக ஆனால் கம்மியில்லாத (last but not least) மனைவி செய்தது எல்லாம் இவற்றுக்கும் மேல்.

இதுக்கெல்லாம் ஒரு போஸ்ட் ஆ ன்னு நீங்க கேக்கலாம்.
இது நடந்தது எனக்கு நல்லது னு சொல்ல வரல. இது நடந்ததால எனக்கு நடந்த நல்லத கவனிக்காம இருக்க முடியல.

எல்லாருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.



பி.கு. இந்த போஸ்ட் ரொம்ப நாள் முன்னாடி ஆரம்பிச்சு பாதில விட்டு draft ல இருந்து இன்னைக்கு போஸ்ட் பண்ணியே ஆகணும்னு போட்டிருக்கேன். ஏனோதானோ ன்னு போட்ட மாதிரி இருந்தா மன்னிச்சூ.....




Saturday, November 26, 2016

இருளின் நிழல் - நிழல் 4

எவ்வளவு யோசித்தும் குழப்பாகவே இருந்தது ராஜேஷ்க்கு. கிரீடிங் கார்டு ஆனந்த் தன் காதலிக்கு எடுத்து சென்றது. அதில் தன் ஆபீஸ் அட்ரஸ் இருக்க என்ன காரணம்? அதுவும் இல்லாத 13th ப்ளோர்க்கு ஏன் போக சொல்கிறது? திரும்பவும் ஞாபகபடுத்தி பார்த்தான். சந்தேகமே இல்லாமல் அதே வார்த்தைகள். "Go to 13th floor". ஒருவித பயம் வந்து தொற்றிக் கொண்டது. யாரிடமும் இதை பற்றி சொல்லவில்லை.

அடுத்த வாரம் போலிஸ் அழைத்தால் போலீஸ் ஸ்டேஷன் சென்றான் ராஜேஷ். அப்பாவின் நண்பர் டாக்டர் அங்கிள் கூட வந்தார். போலீஸ் ஆனந்தின் உடலை தீவிரமாக தேடிவருவதாக கூறினார்கள். இன்னமும் ராஜேஷை சந்தேக கண்ணோடே பார்த்தார்கள்.  டாக்டர் போலீசிடம் நீல நெருப்பை பற்றி தனக்கு தெரிந்தவற்றை கூறினார். போலீஸ் நம்பவில்லை. ராஜேஷ்க்கு புரிந்தது. யார் தான் நம்புவார்கள்? டாக்டர் பேசி விட்டு வரட்டும் என்று ஸ்டேஷன் விட்டு வெளியே வந்து நின்றான். 'ஹலோ' என்று ஒரு பெண் குரல் கேட்டது. 'ஐ ஆம் சஞ்சனா. ஆனந்தோடலவ்வர்.' என்று அறிமுக படுத்திக்கொண்டாள். 

Tuesday, October 25, 2016

கவி-மம்

காலையிலேயே முடிவெடுத்தேன்
கவிதை எழுதிவிடுவது என்று

காலம் காலமாக காத்திருக்கிறது
காகிதமும் என் பேனாவும்

எதைப்பற்றி எழுத?

கூதலும் குளிர்க்காலப்பறவையும்
என்றெல்லாம் எழுத
இலக்கியம் தெரியாது எனக்கு

காதலியை பற்றி எழுதலாம்.
கட்டியவள் கோபிப்பாள்.
குட்டியாக சண்டை வரும்.

காதலை பற்றியாவது எழுதலாம்.
நான் செய்ததெல்லாம்
காதலா என்றே தெரியாது.

கவிதை எழுதும்
நண்பர்களை கேட்கலாம்.
கடலை போடும்
நண்பர்கள் மட்டுமே அறிமுகம்

க, கா வென்று ஆரம்பித்து   
கண்ட இடத்தில் வரியை மடக்கினால்
கவிதை என்றாகி விடுமோ?

உத்வேகத்துக்காக
ஜன்னலின் வெளியே
உற்றுப் பார்த்தேன்
'நான் தான் கிடைத்தேனா?' என
சற்றே முறைத்தது அணில்

கடிகார மணி சத்தம்!
கவிதை தரவில்லை
கடமையை உணர்த்தியது

கவிதை எழுதும்
காலமெல்லாம் கடந்து விட்டேனோ?

களைத்தது மனம்.

கள்ளிக்காட்டு இதிகாசமா
எழுத கேட்டேன்? குறைந்தது
வெள்ளை ஜிப்பா-வேனும்
இருக்க வேண்டும் போல

காகிதத்தை கசக்கினேன்
எறிய மனமில்லை
கவிதை கிடைக்கும்வரை இந்த

கருமத்தை படியுங்கள் 

Tuesday, May 10, 2016

வலைப்பக்கத்தின் பயணம் - ஒரு எளிய அறிமுகம்

நாம கம்ப்யூட்டர்ல இன்டர்நெட் எக்ஸ்ப்லோறேர்-லையோ கூகிள் க்ரோம்-லையோ  www.google.com ன்னு  தேடும்போது நிலத்துக்கு அடியில (அதான், undergroundல) என்ன நடக்குது?  புரியற மாதிரி குட்டி கற்பனை.

கூகிள் ஒரு கடை ன்னு வெச்சிக்கோங்க. அதான் SERVER  நீங்க CLIENT உங்களுக்கு அந்த கடைல இருந்து சாமான் வாங்கணும். உங்க பையன் BROWSER கிட்ட சொல்றீங்க. (ஏன் டவுசெர் ன்னு  பேர் வைக்க வேண்டியது தானே ன்னு கேக்க கூடாது) 


1) 'டேய் BROWSER, கொஞ்சம் இந்த கடைக்கு போய்ட்டு வாடா' ன்னு WWW .GOOGLE.COM ங்கற கடை பேர (URL) சொல்றீங்க


உங்க பையனுக்கு கடை பேர் சொன்னால்லாம் தெரியாது.  அட்ரஸ் தெரிஞ்சா தான் போவான்.


3)  மொதல்ல பையன் ' ஏற்கனவே இந்த கடைக்கு போய் இருக்கோமா? நமக்கு ஆல்ரெடி இந்த URL லோட அட்ரெஸ் தெரியுமா' ன்னு மனசு(BROWSER CACHE)க்குள்ள யோசிப்பான். 'ஏற்கனவே போய் இருக்கான். அட்ரஸ் தெரியும்' ன்னா கெளம்ப ரெடியாயிடுவான். தெரியலயா? எதிர்த்த வீட்டுக்கு போய்  DNS அக்கா கிட்ட கேப்பான். 


4) DNS அக்காவுக்கு ஊர்ல உள்ள எல்லா கடை அட்ரஸும் அத்துபடி. அவங்க URL ல பாத்துட்டு 'இந்தா டா அட்ரஸு, பாத்து போய்ட்டு வா' ன்னு  . 139.130.4.5 ங்கற  மாதிரி அட்ரஸ் (IP ADDRESS)  குடுப்பாங்க.


5) பையன் உங்க கிட்ட 'அப்பா அட்ரஸ் தெரிஞ்சிடுச்சு. என்ன வாங்கணும் ன்னு லிஸ்ட் குடுங்க' ன்னு கேக்கறான்.  நீங்க HTTP REQUEST ங்கற  லிஸ்ட்  குடுக்குறீங்க. 


லிஸ்ட்ல a) நீங்க யாரு, உங்க பையன் ப்ரௌசெர் யாரு அப்டிங்கற METADATA,   b) நீங்க என்ன மொழி (PREFERRED LANGUAGE) ல பேசுவீங்க,  c) போன தடவ கூகிள் அண்ணாச்சி ஜாமா குடுத்தப்ப 'அடுத்த தரம் வரும்போது இந்த இன்பர்மேஷனையும் சேத்து குடுங்க, ஒத்தாசையா இருக்கும் (உதாரணம்: கிரெடிட் கார்டு நம்பர், பாஸ்வேர்ட்) ' ன்னு விட்டுட்டு போன COOKIES (ங்க கம்ப்யூட்டர் ல ஒரு FILE  தான்)  எல்லாம் இருக்கும்


6) இந்த HTTP REQUEST-அ எடுத்துகிட்டுBROWSER கெளம்புவான்.  (TCP CONNECTIONதான் ரோடு. அத ஓபன் பண்ணுவான். நேரா IP address க்கு போவான்.


நீங்க சாமான் வாங்கறதால இந்த request  பேரு "HTTP/GET" request. நீங்க சாமான் (போடோஸ் மாதிரி) குடுத்து அனுப்பிச்சா "HTTP/POST" request


7) கூகிள் அண்ணாச்சி உங்க லிஸ்ட  வாங்குவாரு.. நீங்க அனுப்பிச்ச METADATA , COOKIES எல்லாம் பாப்பாரு. கடைல செக்யூரிட்டி ஜாஸ்தியா இருந்தா 'நீ யாரு, பாஸ்வேர்ட் என்னனு எல்லாம் பாப்பாரு'... பாத்துட்டு 'அட நம்ப சுப்பிரமணி பையனா நீ? மொதல்லையே சொல்ல கூடாதாப்பா?'  ன்னு request  அ  வாங்கி வச்சிக்கிட்டு response  ங்கற சாமான ரெடி பண்ண ஆரம்பிப்பார். 


Response  ல என்ன இருக்கும்ன்னா a)  'தங்கள் கடிதம் கிடைத்தது'ன்ற மாதிரி ஒரு ஸ்டேடஸ் கோட் (200 ன்னா எல்லாம் ஓகே ன்னு அர்த்தம். 404 ன்னா நீங்க கேட்டது இல்ல ன்னு அர்த்தம்), b) நீங்க கேட்ட  HTML BODY 


8) உங்க பையன் இதெல்லாம் எடுத்துகிட்டு திரும்ப TCP CONNECTION ரோட்ல வந்து வீடு சேருவான். வீடு வந்ததும் ரோட க்ளோஸ் பண்ணிடுவான் இல்ல அடுத்து யாரவது போரங்கன்னா தெறந்தே விட்டுடுவான். 


9) வீட்டுக்கு (உங்க கம்ப்யூட்டர்)  வந்ததும் சாமான எல்லாம் ஒழுங்கா எடுத்து வைக்கணுமில்ல. வந்த சாமான் HTML ஆ? போட்டோ வா? பாட்டா? ன்னு தெரிஞ்சிக்கிட்டு அதுக்கேத்த மாதிரி எடுத்து வைப்பான்.  HTML  ஆ இருந்தா அத அழகழகா கலர் கலரா காட்றதுக்கு css file , javascript file  எல்லாம் யூஸ் ஆகும். சில சமயம், இந்த file  எல்லாம் வேற கடைல இருக்கும். மறுபடியும் உங்க பையன் கடைக்கு கெளம்பி போக வேண்டி இருக்கும். 


10) கடைசில நீங்க வந்த பொருள உங்க திரைல பாப்பீங்க. 


இது தாங்க நடக்குது... மேலோட்டமா சொல்லி இருக்கேன். 


இப்போ உங்க பையன் கிட்ட அண்ணாச்சி request  வாங்கினதும், அவர் கடைல இருக்க IIS ங்கற குமாஸ்த்தா என்னன்ன பண்றார் ன்னு இன்னும் விலாவரியா பாக்கலாம். 


அருஞ்சொற்பொருள் 

URL - Uniform Resource Locator (http://www.webopedia.com/TERM/U/URL.html) 
DNS  - Domain Name Servers (http://www.networksolutions.com/support/what-is-a-domain-name-server-dns-and-how-does-it-work/)
TCP - Transmission Control Protocol (http://www.webopedia.com/TERM/T/TCP.html)
HTTP - HyperText Transfer Protocol (http://www.webopedia.com/TERM/H/HTTP.html) 
HTML - HyperText Markup Language