Saturday, November 26, 2016

இருளின் நிழல் - நிழல் 4

எவ்வளவு யோசித்தும் குழப்பாகவே இருந்தது ராஜேஷ்க்கு. கிரீடிங் கார்டு ஆனந்த் தன் காதலிக்கு எடுத்து சென்றது. அதில் தன் ஆபீஸ் அட்ரஸ் இருக்க என்ன காரணம்? அதுவும் இல்லாத 13th ப்ளோர்க்கு ஏன் போக சொல்கிறது? திரும்பவும் ஞாபகபடுத்தி பார்த்தான். சந்தேகமே இல்லாமல் அதே வார்த்தைகள். "Go to 13th floor". ஒருவித பயம் வந்து தொற்றிக் கொண்டது. யாரிடமும் இதை பற்றி சொல்லவில்லை.

அடுத்த வாரம் போலிஸ் அழைத்தால் போலீஸ் ஸ்டேஷன் சென்றான் ராஜேஷ். அப்பாவின் நண்பர் டாக்டர் அங்கிள் கூட வந்தார். போலீஸ் ஆனந்தின் உடலை தீவிரமாக தேடிவருவதாக கூறினார்கள். இன்னமும் ராஜேஷை சந்தேக கண்ணோடே பார்த்தார்கள்.  டாக்டர் போலீசிடம் நீல நெருப்பை பற்றி தனக்கு தெரிந்தவற்றை கூறினார். போலீஸ் நம்பவில்லை. ராஜேஷ்க்கு புரிந்தது. யார் தான் நம்புவார்கள்? டாக்டர் பேசி விட்டு வரட்டும் என்று ஸ்டேஷன் விட்டு வெளியே வந்து நின்றான். 'ஹலோ' என்று ஒரு பெண் குரல் கேட்டது. 'ஐ ஆம் சஞ்சனா. ஆனந்தோடலவ்வர்.' என்று அறிமுக படுத்திக்கொண்டாள். 

No comments:

Post a Comment