Monday, March 16, 2015

Write ஆ? இல்லையா?

எழுத்துப் பணியில் தீவிரம் காட்டலாமான்னு யோசிக்கறேன். காரணங்கள் கீழே.

1) சில சிறுகதை புத்தகங்கள் வாங்கி படிச்சேன். பெரிய எழுத்தாளர்கள் எழுதினது தான். என்னுடைய கதைகள் அந்த சிறுகதைகள் அளவுக்கு ஓரளவாவது இருப்பதாய் எனக்கு தோணுது. (காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு இல்லையா?)

2) எனக்கு வாழ்க்கை போர் அடிக்க ஆரம்பிச்சிடுச்சு. எதாவது பண்ணனும் ன்னு ரொம்ப நாளா ஒண்ணும் பண்ணாம இருக்கேன். மனசுக்கு பிடித்த எதாவது ஒரு வேலை செய்யணும்ன்னு யோசிச்சப்போ குண்டு பல்பு எரிய யோசனை வந்தது. எழுதலாமே ன்னு.

3) நல்ல புத்தகங்கள் படிக்கும் போது யார் கூடயாவது பகிர்ந்து கொள்ளணும்ன்னு ஆசை. ஆனா சக வயது நண்பர்கள் யாரும் மாட்டவில்லை

4) என்னோடைய சில கதைகள படிச்சு நல்லா இருக்குன்னு ரெண்டு மூணு பேர் சொல்றாங்க. அவர்களுக்காக .

சரி அப்போ ஏன் எழுதல? காரணங்கள் கீழே.

1) நா ஒரு சோம்பேறி. ஒட்கார்ந்து யோசிக்க சோம்பேறித்தனம். கிடைக்கும் நேரங்கள் facebook க்கே செலவாயிடுது.

2) முழு எழுத்தாளன் ஆக என்ன தகுதிகள் வேணும்? எப்படி என் கதை ன்னு கட்டி காப்பது?

3) எப்படி என் கதைகளை பத்து பன்னிரண்டு வாசகர்களை தாண்டிப் படிக்க வைக்கறது? அறியோர்கள்/பெரியோர்களின் அனுபவ அறிவின் உதவி தேவை.

4) 'நான் கதை எழுதி இருக்கேன். படிங்க.. படிங்க..' ன்னு கூவி கூவி கேட்க தன்னடக்கம் தடுக்குது. அதையும் மீறி கேட்டால், கேட்டவர்கள் படிப்பதில்லை, படிப்பவர்கள் கமெண்ட்ஸ் கொடுப்பதில்லை. ஓரிருவரை தவிர.

எப்படியும் எழுதுவேன். ஆனா அடிக்கடி எழுத தூண்டுகோல் இல்லை.

நான் கேட்பது எழுத்து பணியில் புகழ் அல்ல. எழுத வைக்கும் ஊக்கம் தான்.

என்ன ? Write ஆ? இல்லையா?

No comments:

Post a Comment