Saturday, August 21, 2010

நெஞ்சம் மறப்பதில்லை - பாகம் மூன்று.

அன்னிக்கு ஒரு நாள். காலேஜ் பிரேக் டைம். பட்ட பகல். உச்சி வெயில். சேர்மன் ரௌண்ட்ஸ் வர நேரம். நாங்க எல்லாரும் கேன்டீன்ல பப்ப்ஸ் சாப்டோம். அன்னிக்கு சம்பவம் நடக்கல.

சம்பவம் என்னிக்கு நடந்ததுன்னா......

அன்னிக்கு ECE டிபார்ட்மென்ட் symposium. அவங்க எல்லாம் ஒரே பிஸி. நாங்க எல்லாம் வழக்கம் போல ஒரே வெட்டி. லஞ்ச் டைம்ல நான், அசோக், சூரஜ், ஆபிரகாம் எல்லாம் சாப்பிட போய்ட்டு இருந்தோம். ஸ்டெப்ஸ் எறங்கி கீழ வந்துட்டு இருந்தப்ப நம்ம ECE நண்பன் ராஜேஷ் கெலத் யாரோ ஒரு சீனியர் கூட பெஞ்ச் தூக்கிட்டு மாடி ஏறிக்கிட்டு இருந்தான். சரி நம்ம பையனாச்சே அப்படின்னு பேச்சு குடுத்தோம்.

'என்னடா ராஜேஷ். பெண்டு கழலுதா?'
'விட்றா இன்னிக்கு ஒரு நாளாவது வேல பாக்கட்டும்'
' மச்சா ஹெல்ப் ப்ளீஸ்... இந்த பெஞ்ச கொஞ்சம் மேல தூக்கிட்டு போங்கடா' ராஜேஷ் உதவி கேட்டான்.
'மச்சி உன் பிரச்சனை எனக்கு புரியுது... இருந்தாலும் எங்களுக்கு அத விட முக்கியமான பிரச்சனை இருக்குடா... வயத்து பிரச்சனை....வயத்து பிரச்சனைய விட இந்த உலகத்துல வேற எந்த பிரச்சனையும் பெரிய பிரச்சனை எதுவும் இல்லடா. அத மொதல்ல கவனச்சிடு வரோம்'
ராஜேஷ் & சீனியர் பெஞ்ச தூக்கிட்டு கஷ்டப்பட்டு நிக்கிற நேரத்துல கூட மரண மொக்க போட்டேன்.
கூட வந்த ECE சீனியர், நாங்க எல்லாம் ECE டிபார்ட்மென்ட் ஜுனியர்ஸ் அப்பிடின்னு நெனச்சிட்டான். சுர்ர்ருன்னு டென்ஷன் ஏறிடுச்சு தலைவருக்கு.

'டேய்...தூக்கிட்டு போங்கடா னா கேக்க மாட்டீங்களா? மரியாதையா எடுத்துகிட்டு போங்கடா'
'சாரி பாஸ்... நாங்க எல்லாம் மரியாதை தெரியாத பசங்க' அப்பிடின்னு சொல்லிட்டு நாங்க நடக்க ஆரம்பிச்சிட்டோம்.
என்னடா ஜுனியர் பசங்க நம்ம பேச்ச கேக்க மாட்டறாங்களே அப்பிடின்னு அவருக்கு இன்னும் டென்ஷன் ஆய்டுச்சு. பெஞ்ச கீழ வெச்சிட்டு நேரா வந்து எங்கள மடக்கினான். 'உன் பேரு என்ன டா? பேர சொல்லுங்க' அப்பிடின்னு மிரட்ட ட்ரை பண்ணான்..... முடியுமா?
'நான் ஜார்ஜு புஷ்...இவர் சதாம் உசேன்... அவரு நெல்சன் மண்டேலா...பாருங்க மண்டைய பாத்தாலே தெரியுது' அப்படின்னு அசோக் சைடுல ஆபிரகாம சேர்த்து கலாய்ச்சான். சீனியர்க்கு உச்ச கட்ட கோவம். அசோக் ID Carda புடுங்க ட்ரை பண்ணான்.

இந்த இடத்துல எங்க ID கார்டு பத்தி சொல்லியே ஆகணும். காலேஜ்ல ID கார்டு எங்களுக்கு தாலி மாதிரி. காலேஜ் Professors பாடம் நடத்தி எங்க தாலிய அறுப்பாங்க. கிளாஸ்க்கு வெளிய பிரச்சனை பண்ணா நடுவீதியில சீனியர்ஸ், professors..சேர்மனோட அள்ளககைs யாரு வேணும்னாலும எங்க தாலிய அறுக்கலாம். ஷேவ் பண்ணல...முழுக்கை சட்டை போடல...சொல்ற பேச்ச கேக்கல இப்படி எதுக்காக வேணும்னாலும் உங்க தாலி பறிபடலாம். இந்த மாதிரி தாலிய அறுத்துக்கிட்டு போய் மார்வாடி கடைல அடகு வெக்குற மாதிரி அக்கௌன்ட்ஸ் ஆபீஸ்ல குடுத்துடுவாங்க... நாங்க போய் வட்டி கடற மாதிரி fine கட்டி திருப்பி வாங்கிட்டு வரணும்

Back to the சம்பவம்....
நாங்க எல்லாம் சீனியர பிடிச்சி ஒதுக்கி விட்டு 'ID card மேல கைய வெக்காத... உங்க டிபார்ட்மென்ட் symposium க்கு நாங்க எதுக்கு பெஞ்ச தூக்கணும்...' அப்பிடின்னு கொஞ்சம் பக்குவமா மரியாதையோட நாலு கெட்ட வார்த்தை பேசி அனுப்பி விட்டோம். சீனியர் மொரச்சிக்கிட்டே போய்ட்டான். நாங்க எங்க வயத்து பிரச்சனைய கவனிக்க போய்ட்டோம்.

அப்போ நாங்க எதிர்ப்பாககல...பிரச்சனை பெரிசாகும்னு....

Wednesday, August 11, 2010

நெஞ்சம் மறப்பதில்லை - பாகம் இரண்டு.

பெலிக்ஸ்...தமிழ்ல சரியா வரல. Felix - ஸ்டைல் பையன். First year ல இவன் வேற section. எங்க காலேஜ்ல செல்போன் கொண்டு வர கூடாது அப்பிடின்னு ஒரு ரூல் இருந்தது. எங்க கிட்ட அப்போ எல்லாம் செல்போனே கெடயாது. ஆனா அந்த காலத்துலேயே இவன் நோக்கியா 2100 கொண்டு வருவான். Coolers, bike, watch, hairstyle, dance எல்லாம் ரிச்சா இருக்கும். எல்லாம் Baap ka paisa. ஆனா வாய தொறந்தா ஒரு கூவம் ஆறே ஓடும். கெட்ட வார்த்தைகள் சரளமா வரும். ராயபுரம் ஏரியா வேற. சோ பெரிய ரவுடி அப்பிடின்னு நான் நெனச்சிட்டேன். Third year ல நான் அசோக் felix மூணு பேரும் ஒரே பெஞ்ச். அப்போ இவன் எங்க கிட்ட வாங்காத அடியே கெடயாது. நம்ம கார்த்தி நாய் சேகர் மாதிரினா Felix கை புள்ள மாதிரி.
கோச்சிகாதடா Felix. உனக்கு மன வலிமை ஜாஸ்தி(building strong), ஆனா உடல் வலிமை கம்மி. (basement weak). இவன் கிட்ட மறக்க முடியாத சம்பவங்கள், காலேஜ் சேர்மன் செல்போன் raid வந்தப்போ ஜட்டிகுள்ள செல்போன் ஒளிச்சி வெச்சது, பிரம்மா சார் கிட்ட வம்பிழுத்து அவர மெஸ் ல இருந்து அழுதுகிட்டே ஓட வெச்சது. 'As i am suffering from stomach ache, i want to goto the restroom' அப்பிடின்னு லெட்டர் எழுதி சார கலாய்ச்சது...டூர் போனப்ப யாரையும் தூங்க விடாம இவன் பண்ண கலாட்டாக்கள்...மற்றும் பல.

பிரபு... இட்ட பேரு பிரபு...பட்ட பேரு பேய் கதை. ஏன் அந்த பேரு வந்ததுன்னு தெரியாது. ஆனா இவன பிரபு அப்பிடின்னு யாருமே கூப்பிட்டது இல்ல.
நல்ல பாடகன். ரொம்ப நல்லா பாடுவான். லாஸ்ட் பெஞ்ச் ல ஒகாந்திகிட்டு ரேடியோ ஸ்டேஷன் மாதிரி பாடுவான். நேயர் விருப்பம் கேட்டு அவங்க கேக்கற பாட்ட பாடுவான்....நடுவுல 'வஜ்ரதந்தி....வஜ்ரதந்தி வீக்கோ வஜ்ரதந்தி' மாதிரி 'முனியமமா தேன் மிட்டாய்' அப்பிடின்னு மாத்தி விளம்பரம் வேற பாடுவான். இவன் கூட இருந்தா சிரிச்சிகிட்டே இருக்கலாம். அடிதடிக்கு பயப்பட மாட்டான். ஒரே ஒரு ஜூனியர் பையன அடிக்க 14 பேர கூட்டிகிட்டு போய் ஏரியாவயே கலக்கிட்டு வந்தான்.

ஆபிரகாம் - காதல் மன்னன். ஆனா எல்லாம் failure தான். ஒரு நாள் பாத்தா 'அந்த பொண்ணு என்ன ஏமாத்திட்டா டா..எப்படி எல்லாம் இருந்தோம் தெரியுமா' அப்பிடின்னு 'ஒ'ன்னு அழுவான். அப்புறம் ஒரு மாசம் நல்லா இருப்பான். அடுத்த மாசம் பாத்தா 'இந்த பொண்ணு என் மனச புரிஞ்சிக்கவே மாட்டேன்றா' அப்பிடின்னு அழுவான். எங்களுக்கு சிரிப்பா இருக்கும். இவனோட செல்ல பேரு 'மாடு'. வெறி பிடிச்சா முட்ட ஆரம்பிச்சிடுவான்.
இவன் அப்பா கஸ்டத்துல இருக்கார்....சாரி கஸ்டம்ஸ் ல இருக்கார். அதனால இவன் எது வெச்சி இருந்தாலும் அது அவங்க அப்பா குடுத்ததா இருக்கும். கேட்டா என் கசின் gifta குடுத்தது அப்பிடின்னு ரீல் விடுவான்.

அப்புறம் நான் - இந்த கதைக்கும் இவனுக்கும் சம்மந்தம் இல்ல....ஆனா இவனால தான் இந்த கதையே...(குஷி ல SJ Surya வுக்கு குடுத்த இன்ட்ரோ எனக்கு)

சரி.....நாம சம்பவத்துக்கு போவோமா?

Sunday, August 8, 2010

நெஞ்சம் மறப்பதில்லை. பாகம் ஒன்று

சமீபத்துல தான் Five point someone புக் படிச்சேன். தன்னோட கல்லூரி வாழ்க்கைல நடந்த விஷயத்த சாதரணமா சொல்லி இருக்காரு Chetan Bhagat. படிச்சி முடிச்சப்பவே நான் முடிவு பண்ணிட்டேன். நம்மளும் இது மாதிரி ஏதாவது எழுதணும் அப்படின்னு.

எழுதணும் அப்படின்னு முடிவு பண்ண உடனே எனக்கு மனசுல தோணின சம்பவம் எங்க பசங்க சீனியர் பசங்க கூட போட்ட சண்ட தான். ஒரு மாசம் கழிச்சி இப்போ தான் டைம் கிடைச்சி இருக்கு. Fulla சொல்ல முடியாது.Part parta சொல்றேன். இதுல ஹீரோ வில்லன் எல்லாம் கெடயாது..எல்லாருமே காமெடியன் தான். அதே மாதிரி சண்ட அப்படின்னு சொன்னவுடனே எதோ figure பிரெச்சனை ragging பிரெச்சனை அப்படின்னு நெனச்சிடாதீங்க. அதெல்லாம் புனித போர். நாங்க போட்டது சப்ப மேட்டருக்கு சண்ட. சரி கதைக்கு போவோம்.

இந்த பாகம் character intro.

எங்க காலேஜ் gang ஒரு உருப்புடாத gang. எவனுமே படிக்கிற பசங்க கெடையாது. சூரஜ் தவிர. ரவுடி பசங்க....(அப்படின்னு ஒரு இமேஜ் கிரியடே பண்ணி வெச்சி இருந்தோம். But அன்னிக்குதான் எல்லாரும் எவ்வளோ பெரிய ரௌடிங்க அப்டின்னு தெரிஞ்சது. இந்த கதையோட கடைசில நீங்களும் தெரிஞ்சிக்குவீங்க.

அசோக்-என்னோட் பெஸ்ட் வொர்ஸ்ட் நண்பன். கண்ணன் காலனி பையன் அப்பிடின்னு தெரிஞ்சதும் பர்ஸ்ட் இயர்ல சீனியர்ஸ் கூட இவன rag பண்ணல. ஏரியா அந்த மாதிரி. ஒண்ணும் தெரியாத மாதிரி மூஞ்ச வச்சிகிறது இவனுக்கு கை வந்த கலை. ஆனா பெரிய கேடி. ஒரு தடவ யூனிட் டெஸ்ட்ல டெஸ்க்க்கு கீழ புக் வெச்சி காப்பி அடிக்கறதுக்காக பிளான் பண்ணி இருந்தான். சார் வந்து டெஸ்க் டெஸ்க்கா ரௌண்ட்ஸ் வந்து இவன் டெஸ்க் கீழ புக் இருக்கறத கண்டு பிடிச்சிடாரு. புகக எடுத்துகிட்டு ஸ்டாப் ரூம் போய்ட்டாரு. பையன் புயல் வேகத்துல ஸ்டாப் ரூம் போனான். சார் இவன திட்ட ஆரம்பிச்சு பத்து செகண்ட் தான் ஆயிருக்கும். அதுக்குள்ள பையன் plate a திருப்பி போட்டான். 'சார் நான் காப்பி அடிச்சத நீங்க பாத்தீங்களா? எவனோ புக் வெச்சி என்னை மாட்டி விட பாக்கறான். லேடீஸ் ஸ்டாப் முன்னாடி இப்படி பேசினீங்கனா அவங்க என்னை பத்தி எனன நெனைப்பாங்க? அனாவசியமா ஒரு அப்பாவி மேல பழி போடாதீங்க' அப்படின்னு ஒரு சீன போட்டான் பாருங்க......நானே 'ஒரு வேலை நெஜமாவே இவன் காப்பி அடிக்கல போல இருக்கே.' அப்பிடின்னு நெனச்சிட்டேன். இன்னும் கொஞ்ச நேரம் நல்ல திட்டிட்டு பேப்பர் எல்லாம் பறக்க ஸ்டாப் ரூம் விட்டு போய்ட்டான். சார் கலங்கி போய்ட்டாரு. 'நான் என்னப்பா தப்பா கேட்டுட்டேன்' அப்படின்னு அழாத குறையா ஆயிட்டாரு..கிளாஸ் ரூம் போய் பாத்தா இந்த நாய் சிரிச்சிகிட்டு இருக்கு. இவளோ சண்டைலையும் கரெக்டா சார் கொண்டு போன புகக திருப்பி சுட்டுகிட்டு வந்துட்டான்.

கார்த்தி- குட்டி Body builder, Keyboard player. singer, dancer......இவ்வளோ characters இருக்கறதுனால இவன் பெரிய ஹீரோ அப்பிடின்னு நெனச்சிடாதீங்க. சரியான காமெடி பீஸ். சுருக்கமா சொல்லனும்னா நம்ம நாய் சேகர் மாதிரி. வாய் உதார் ரொம்ப ஜாஸ்தி. 'ஒரு ஆளு கைய அரிவாளால வெட்டிட்டு ஜெயில்ல இருந்தேன்' அப்பிடின்னு ஒரு பரபரப கெளப்பி விட்டுடுவான். லைட்டா நோண்டி கேட்டா 'வெட்டல...அரிவாள் கை தவறி அவன் மேல விழுந்துடுச்சு' அப்பிடின்னு சொல்லுவான். இன்னும் நோண்டி கேட்டா 'அரிவாள் இல்ல...குச்சியால அடிச்சேன் அப்பிடின்னு நெனைக்குறேன். கோவமா இருந்தேன் இல்ல? கைல என்ன இருந்ததுன்னு ஞாபகம் இல்ல' அப்பிடின்னு லெவல் குறைசசிகிட்டே போவான். சரியான டுபாக்கூர் fellow.

Felix, prabhu பத்தி அடுத்த தடவ சொல்றேன்.
இப்போ......தொடரும்......