Thursday, October 23, 2014

கலாச்சாரத்தின் பரிணாம வளர்ச்சி

முன்னெல்லாம் 'இந்தியர், தமிழர் ன்னு சொல்லிக்க வெட்கப்படறாங்களே' ன்னு நிறைய கவலைப்படுவேன். ஆனா சமீப காலங்கள்ல ரொம்ப ஓவரா பெருமைப்பட்டுக்குறோமோ  ன்னு தோணுது. ஈமெயில் ல கண்டு பிடிச்சது தமிழன், மைக்ரோசாப்ட் CEO  இந்தியன் ன்னு ஆரம்பிச்சி, பொண்ணுங்க ஏன் பொட்டு  வைக்கறாங்க, மாடு ஏன் அம்மா ன்னு கத்துது ன்னு போய் இப்போ லேட்டஸ்ட்டா கமலஹாசன் எபோலா வரும் ன்னு அந்த காலத்துலேயே சொன்னாருன்ற  வரைக்கும் கொண்டு வந்துட்டாங்க.

இந்த மாதிரி எல்லாத்தையும் இந்தியர்கள் தான் கண்டு புடிக்கறாங்க ன்னு முன்னாடியே தெரிஞ்சி தான் 2012 ஹாலிவுட் படத்துல உலகம் அழிய போகுது ன்னு இந்தியன் தான் பர்ஸ்ட் கண்டுபிடிக்கறான் ன்னு காட்டி இருக்காங்க. (அயய்யோ நானும் மாறிட்டேனே) 

நண்பர் ஒருத்தர் இது ரிலேட்டடா பேசும் போது டய்மிங்க்கா ஒரு கதைய ஞாபகப்படுத்தினார். ஏற்கனவே தெரிஞ்சாலும் பெட்டி செய்தியா அது இதோ. 
சைனாக்காரன் அவங்க ஊர்ல அகழ்வாராய்ச்சி பண்ணும் போது மண்ணுக்குள்ள copper wire  பதிஞ்சி இருந்தத கண்டு பிடிச்சானாம். உடனே எல்லா உலக விஞ்ஞானிகள கூப்பிட்டு சொன்னானாம் 'பாத்திங்களா? அந்த காலத்துலேயே நாங்க டெலிபோன் கனேக்க்ஷன் வெச்சி இருந்தோம்'.
ரஷ்யாக்காரன் அவங்க ஊர்ல அகழ்வாராய்ச்சி பண்ணும் போது மண்ணுக்குள்ள fiber  optic cable பதிஞ்சி இருந்ததாம். உடனே எல்லா உலக விஞ்ஞானிகள கூப்பிட்டு சொன்னானாம் 'பாத்திங்களா? அந்த காலத்துலேயே நாங்கஇன்டர்நெட் கனேக்க்ஷன் வெச்சி இருந்தோம்'. இந்தியன் பார்த்தான். ஊருக்கு போய்  அவனும் நிலத்த தோண்டினான். எல்லா உலக விஞ்ஞானிகள கூப்பிட்டு காட்டினான். 'என்னயா? ஒண்ணுமே இல்லையே' ன்னு விஞ்ஞானிகள் கேட்டாங்க. இந்தியன் 'பாத்திங்களா, ஒரு wire-ம் இல்ல. அந்த காலத்துலேயே நாங்க wireless communication வெச்சி இருந்தோம்' ன்னு சொன்னானாம் 
'மனிதனும் மர்மங்களும்' புத்தகத்துல மதன் சொல்றாரு 'கூட்டுப்ரார்த்தனை, நெற்றிக்கண் ' எல்லாத்துக்கும் ஒரு அர்த்தம் இருக்கு. விஞ்ஞானிகள்  இப்போ தான் கண்டுபிடிக்கறாங்க ஆனா நாம ரொம்ப வருஷமா இத தெரிஞ்சி வெச்சி இருக்கோம்' ன்னு. இந்த மாதிரி விஷயங்கள்ல ஒரு pattern இருக்கு. அதாவது நாம ஒரு விஷயம் எதுக்கு பண்றோம்ன்னு தெரியாம பரம்பர பரம்பரையா செஞ்சிக்கிட்டு வருவோம். வெள்ளகாரன் தான் நமக்கு கண்டு புடிச்சி சொல்லுவான் 'தமிழன்  இத முன்னாடியே தெரிஞ்சி வெச்சி இருக்கான்' ன்னு. நமக்கும் அப்போ தான் தெரிய வரும். இருந்தாலும் காலர தூக்கி விட்டுக்குவோம். இதுக்கும் ஒரு (தெரிஞ்ச) கதை சொல்றேன். 

பலநூறு வருஷங்கள் முன்னாடி, முனிவர் ஒருத்தர் குருக்குலத்துல பாடம் சொல்லி  கொடுத்தாராம். அங்க ஒரு பூனை சுத்திக்கிட்டே இருந்துச்சாம். பசங்களுக்கு கவனம் சிதறுதே ன்னு அத அங்க இருக்க ஒரு தூண்ல கட்டி போட சொன்னாராம். 'இனிமே தினமும் நா படம் நடத்தும் போது  இந்த பூனைய கட்டி போட்டுங்க' ன்னு சொன்னாராம். சிஷயர்கள் இத ரொம்ப நாளைக்கு பின்பற்றி இருக்காங்க. அந்த முனிவர் இறந்து போய் அவரோட தலைமை சிஷ்யர் ஒருத்தர் குரு ஆனாராம். அடுத்த நாள் அவர் பாடம் நடத்த வரும்போது அங்க சுத்திக்கிட்டு இருந்த பூனைய காணோம். புது குரு பதட்டம் ஆயிட்டார். 'சிஷயர்களே, உடனே போய் ஒரு பூனைய புடிச்சிக்கிட்டு வாங்க. அத தூண்ல கட்டாம பாடம் எடுக்க கூடாது ன்னு உங்களுக்கு தெரியாது?' ன்னு சத்தம் போட்டாராம். 
அந்த கதையோட extension . (படம் முடிஞ்சி டைட்டில் போட்டு முடிச்சதும் ஒரு சீன் இருக்குமே அது மாதிரி). இப்படியே ரொம்ப வருஷம் ஏன் பண்றோம் ன்னு தெரியாம இந்தியர்கள் பூனையை கட்டிப்போட்டுபாடம் நடத்திக்கிட்டு இருக்காங்க. பல நூற்றாண்டுகள் கழிச்சி விஞ்ஞானிகள்  'பூனைய பக்கத்துல வெச்சிக்கிட்டு படிச்சா பர்ஸ்ட் ரேங்க் எடுக்கலாம். இத தான் இந்தியர்கள் பல நூறு வருஷங்கள் முன்னாடில இருந்து செஞ்சிக்கிட்டு இருக்காங்க' ன்னு கண்டு பிடிக்கறாங்க. உடனே நம்ப பசங்க 'நாங்க எல்லாம் அப்போவே அப்பிடி..ஆஹ்ங்' ன்னு பேஸ்புக் ல போட்டுக்கறாங்க.   

'சரி நைனா இப்போ இன்னா தான் சொல்ற ?'

என்ன சொல்றேன்னா 
ஒன்னு) நம்ப குருட்டுத்தனமா ஃப்பாலோ பண்ற பல விஷயங்கள ஏன் பண்றோம் ன்னு தெரிஞ்சி வெச்சிக்கணும். 'ஆதி தமிழன் ஆண்டவன் ஆனான். மீதி தமிழன் அடிமைகள் ஆனான்' ன்னு பில்லா படத்துல அஜித் சொல்லி இருக்காரு. சோ ஆதி தமிழன்/இந்தியன் பண்ணதுக்கு என்ன அர்த்தம் ன்னு தெரிஞ்சிக்கணும்.
ரெண்டு) புதுசு புதுசா க்ரியேடிவ்வா நிறைய கண்டு பிடிக்கணும்.

இவளோ பெரிய பழைய நாகரிகத்த வெச்சி இருக்க நாம இன்னும் நிறைய கண்டு புடிச்சி இருக்கலாம். ஆதி தமிழன்/இந்தியன் நிறைய கண்டு புடிச்சி தான் இருக்கான். நடுவுல தான் 'உணவே மருந்து மருந்தே உணவு', 'குந்தித் தின்றால் குன்றும் கரையும்' ன்னு நம்ம கான்சென்ட்றேஷன் எல்லாம் சாப்பாட்ல போய்டுச்சு ன்னு நெனைக்கறேன். 

எல்லாம் ஒரு வேலை கல்வி முறை மாறினதுனாலயோ? ஒழுங்கா குருக்குல கல்வி இருந்திருக்கலாம். புதன் கிரகத்துக்கு ராக்கெட் விட சொல்லி குடுத்த நம்ப கல்வி, புலி முன்னாடி பதினைஞ்சு  நிமிஷமா ஒக்காந்திருந்தும் எப்படி உயிர் பிழைக்கறதுன்னு சொல்லி தரலையே. 

'இவளோ சொல்றியே நீ என்னடா பண்ண' ன்னு கேக்குறீங்களா?' அவளோ அறிவு இருந்தா நா ஏங்க  இங்க வெட்டியா பேசிக்கிட்டு இருக்கப் போறேன்.

பி.கு. இத படிச்சிட்டு நா தமிழன இழிவு படுத்தறேன் ன்னு நெனைக்காதீங்க. தமிழன் ன்ற பெருமை எப்பவுமே உண்டு. ஆனா கர்வம் கெடையாது. "நா தியாகி இல்ல..அதே சமயத்துல துரோகியும் இல்ல" (மாப்ள எங்கயோ கேட்ட மாதிரி இல்ல? )

Tuesday, October 14, 2014

திருட்டுக் குட்டி

என் பொண்ணு பண்ற லொள்ளுத்தனங்கள இந்த ஊர் உலகத்துக்கு தெரிய படுத்தனும்னு ரொம்ப நாளா  நெனச்சிக்கிட்டு இருந்தேன். இன்னிக்கு தான் நேரம் வந்து இருக்கு. வீட்டுக்கு வரவங்க எல்லாம் 'இந்த நல்ல புள்ளைய பத்தி complaint  பண்றியே ' ன்னு  என்னை கேக்கறாங்க. அவ பண்ற லொள்ளுங்கள இனி இங்க போட்டுகிட்டே வர  போறேன்.

லொள்ளு நம்பர் 1:
அவ தமிழ் கிளாஸ் ல பாட்டு சொல்லி கொடுத்து இருக்காங்க.
"ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரே பூ பூத்துச்சாம்"

அவளுக்கு அது சரியா சொல்ல வரல. சரி நாம அத அவளுக்கு புரிய வெச்சோம்னா  அவளுக்கு சொல்றதுக்கு ஈஸியா இருக்குமேன்னு கொஞ்சம் இங்கிலீஷ் கலந்து 'pot  ல plant  இருக்கும். தண்ணி நா வாட்டர். பூ ன்னா  flower.. தண்ணி ஊத்தினா பூ பூக்கும்' ன்னு எக்ஸ்ப்ளெயின் பண்ணேன். ஆனா நம்ப பசங்க தான் நாம சொல்றத கேக்கறதே இல்லையே.

'நோ அப்பா. அப்டி இல்ல. நா சொல்றேன் கேளு. தண்ணி நா வாட்டர். poopoo  ன்னா  (from  'poo poo'த்துச்சாம்) poopoo. ஒன்  தண்ணி குடிச்சா  ஒன் poopoo வரும். டூ தண்ணி குடிச்சா டூ poopoo  வரும். '

சிரிச்சி சிரிச்சி எனக்கு கண்ல தண்ணியே வந்துடுச்சு.

லொள்ளு நம்பர் 2:
வீட்டுக்கு வந்திருந்த இன்னொரு குழந்தை கூட இவ டாய்  ஷேர் பண்ணல. ஒரே அடம். கடைசியா இவ கிட்ட இருந்து வாங்கி அந்த குழந்தை கிட்ட குடுத்துட்டோம். இவ கோவிச்சிக்கிட்டு ரூம் விட்டு போய் சோபா ல படுத்துக்கிட்டு ஒரே அழுகை. நல்ல விதமா சொன்னா புரிஞ்சிக்குவா ன்னு போய் விளக்கம் குடுத்தேன். 'அவ சின்ன கொழந்தை. நீ தான் பெரிய பொண்ணு. நீ தான் விட்டுக்கொடுக்கணும். நீ இப்போ டாய் ஷேர் பண்ணா தான் அவங்க வீட்டுக்கு போகும்போது அவ டாய் உனக்கு ஷேர் பண்ணுவா. எல்லாரும் உன்ன குட் கேர்ள் ன்னு சொல்லுவாங்க' ன்னு ஒரு பத்து  நிமிஷம் பேசினேன். நா சொல்றத எல்லாம் லைட்டா அழுதுக்கிட்டே உம் கொட்டி கேட்டுட்டு இருந்தா. நா எல்லாம் சொல்லி முடிச்சு 'ஒக்கே வா' ன்னு கேட்டேன்.
'அப்பா நீ இப்போ நல்லா சொன்னியே..(ஒருநொடி பெருமை பீலிங்க் எனக்கு)..... திருப்பி சொல்லு (பெருமை பீலிங்க் புஸ்ஸுன்னு போய்டுச்சு)'

லொள்ளு நம்பர் 3:

கவின்-உம் தியா-வும் சேர்ந்துட்டா யாராலயும் எதுவும் பண்ண முடியாது. ரெண்டு பேரும் பாசமா இருப்பாங்க. அதே நேரத்துல சண்டையும்  போட்டுக்குவாங்க. எல்லாமே போட்டி தான். 'I  win ' 'I can jump higher' ன்னு எல்லாமே competition. ஓடிக்கிட்டே இருப்பாங்க. புடிச்சி வைக்க முடியாது. மிரட்டினாலும் மதிக்க மாட்டாங்க  ஒரே பயம் 'போலீஸ்'

ஷாப்பிங் மால் போனோம் போன வாரம். அங்க இருந்த சோபா ல ஒக்காந்து வெயிட் பண்ணிட்டு இருந்தோம். வழக்கம் போல தியாவும் கவினும் ஓட ஆரம்பிச்சிட்டாங்க. அங்க நடந்து போறவங்களுக்கு ஒரே disturbance. நானும் ரெண்டு மூணு தடவ சொல்லி பாத்துட்டேன். அடங்கவே இல்ல. போலீஸ்க்கு கால் பண்ணிடுவேன் ன்னு போன் எடுத்து காட்டினேன். பயந்து போய்  அமைதியா ஒக்காந்துட்டாங்க  கொஞ்ச நேரம் தான். மறுபடியும் ஓட ஆரம்பிச்சிட்டாங்க. எவ்வளோ நேரம் தான் நா போலீஸ்க்கு கால் பண்ற மாதிரி நடிக்கறது?  சுத்தி சுத்தி பாத்ததுல ஒரு கடைக்கு மேல ஒரு கேமரா இருந்தது. ஐடியா!

ரெண்டு பேரையும் கூப்பிட்டு 'நா போலீஸ்க்கு கால் பண்ணி சொல்லிட்டேன். அதோ ஒரு கேமரா இருக்கு பாருங்க. அவங்க அங்க இருந்து உங்கள வாட்ச் பண்ணிடே இருக்காங்க. நா கை அசைச்சா போதும். உங்கள வந்து கூட்டிட்டு போய்டுவாங்க. ஒழுங்கா போய் உக்காருங்க.' ன்னு சொல்லிட்டேன். ரெண்டு பெரும் அமைதியா போய்  சோபா ல ஒக்காந்துக்கிட்டாங்க.

கொஞ்ச நேரம் ஒழுங்கா தான் இருந்தாங்க. அப்பறம் தியா நைசா சோபா ல இருந்து இறங்கி போனா. நா சைலண்ட்டா பாத்துக்கிட்டே இருந்தேன். அங்க இருந்த advertisement board  பின்னாடி போய் நின்னுக்கிட்டு 'கவின் கவின் கம் ஹியர்' ன்னு whispering  வாய்ஸ் ல கூப்பிட்டா. அவன் அப்பாவியா எழுந்து போனான். போர்ட்ல ஏதோ அவனுக்கு காமிக்கற மாதிரி காட்டிட்டு அவன் அத பாத்துகிட்டு இருக்கும் போது  குடுகுடு ன்னு என்கிட்ட ஓடி வந்து 'அப்பா அப்பா கவின் அங்க நிக்கறான். சீக்கிரம் போலீஸ்க்கு கால் பண்ணு' ன்னு சொல்லிட்டு கடை மேல இருந்த கேமரா பாத்து கை அசைச்சு கூப்பிட ஆரம்பிச்சிட்டா.

லொள்ளு நம்பர் 4:
இது அவ தொணதொணன்னு கேள்வி கேக்கற ஸ்டேஜ் போல. ஏன் ஏன் ஏன் ன்னு நச்சரிச்சிக்கிட்டே இருப்பா. நான் ஓரளவுக்கு அவளுக்கு எல்லாம் பதில் சொல்லிடுவேன். ஆனா விடாம ஏன் ன்னு கேட்டுட்டே இருப்பா.

'ஏன் humans எல்லாம் ரெண்டு கால்ல நடக்குறாங்க? animals எல்லாம் நாலு கால்ல நடக்குறாங்க?' ன்னு கேட்டா. சரி நாம புத்திசாலி தனமா இப்போவே evolution  பத்தி சொல்லி தரலாம் ன்னு 'Monkeys ல இருந்து humans  வந்தாங்க. கொஞ்சம் கொஞ்சமா நாலு கால்ல இருந்து ரெண்டு கால்ல நடக்க கத்துகிட்டாங்க' ன்னு சொன்னேன். 'ஏன் monkeys  மட்டும் humans ஆனாங்க? ஏன் மத்த animals  ஆகல?' நா என்னத்த சொல்லுவேன்? 'அது அப்படி தான். God  வந்து இந்த world  create  பண்ணும்போது அப்படி தான் பண்ணாரு' ன்னு சொல்லிட்டு அடுத்து அவ God  நா யாரு ன்னு கேட்பாளே என்ன சொல்றது ன்னு யோசிச்சிட்டு இருந்தேன். அதிசயமா அவ அமைதி ஆய்ட்டா.

நம்ம வாய் தான் சும்மா இருக்காதே. 'God நா யாரு தெரியுமா?' ன்னு கேட்டேன். 'ஓ தெரியமே' ன்னு சொல்லிட்டா. (எங்க வீட்ல சாமி எல்லாம் இருக்கு. பட் அவளுக்கு சாமி ன்னு ஒரு toy  மாதிரி தான் தெரியும். God  ன்னு english ல தெரியாது ன்னு நெனச்சிட்டு இருந்தேன்)

'சரி God ன்னா  யாரு?'
'ரெட் ட்ரெஸ் போட்டு இருப்பாங்களே'
'(ஆதி பராசக்தி யா) சரி ஓரளவுக்கு ரைட்டு'
'fight  பண்ணுவாங்களே'
'(evil  fight  பண்றத சொல்றாளோ) அப்பறம்?'
'கைல long  spear  வெச்சி இருப்பாங்களே'
'(வேல் வெச்சி இருக்கறத சொல்றாளே. இது சாதாரண கொழந்தை இல்ல. தெய்வ கொழந்தை ன்னு நெனச்சிகிட்டு  புல்லரிச்சிகிட்டே இருக்கும் போது அடுத்து சொன்னா
'Princess  Sofia  ல வருவாங்களே'
இப்போ நா confuse  ஆய்ட்டேன். Sofia the first கார்ட்டூன் நானும் தான் பாக்கறேன்.அதுல எங்க God  வருது?
'அதுல எங்க வராங்க?'
'வருவாங்க, Princess Ivy கூட'

அப்போ தான்  ஸ்டரைக் ஆச்சு.
'அம்மு, நா சொல்றது God . நீ சொல்றது Gaurd' ஒரு நிமிஷம் என்னோட கற்பனைய  நெனச்சி சிரிச்சிக்கிட்டேன் .

லொள்ளு நம்பர் 5:
'அப்பா. என் கூட விளையாடாத. தாடி குத்துது'
'மறுபடியுமா? இப்போ தானே ஷேவ் பண்ணேன்'
'திரும்ப திரும்ப திரும்ப வந்துட்டே இருக்கு'
'சரி, தாடி ஏன் முளைக்குது?'
'அது .. அது நேத்து நீ ஆபீஸ் போன. அப்போ கார்ல போகும் போது  குடை எடுத்துட்டு போகல'
'சோ?'
'மழை பெய்ஞ்சுதா... அப்போ டிராப்ஸ் எல்லாம் உன் கன்னத்துல பட்டுடுச்சு.. அதான் தாடி வந்துடுச்சு.'

தண்ணி ஊத்தி வளர்க்க அது என்ன மரமா? 

லொள்ளு நம்பர் 6:
தியா-விற்கு அவளோட ஹேர் ஸ்டைல் மேல ஒரு இது.
ஆத்திச்சுடி சீரீஸ்  ஸ்டோரீஸ் பாப்போம் யூடியுப் ல.
ஒவ்வொரு ஆத்திச்சுடி க்கும் ஒரு ஸ்டோரி வரும். 'ஆறுவது சினம்' ஸ்டோரில ஒரு பையன் கோவத்துல கைல இருக்க ரிமோட்ட  தூக்கி போட்டுடுவான். அவங்க அம்மா அவன் தலைமுடிய புடிச்சி ஸ்கேலால அடிப்பாங்க. (அதுக்கு அந்த பையன் கோச்சிக்கிட்டு சாப்பிடாம ஸ்கூல் போய் அங்க மயக்கம் போட்டுடுவான். அப்ப ஒரு நல்ல பொண்ணு சாப்பாடு குடுத்து 'கோவபடாத.ஆறுவது சினம்' ன்னு சொல்லும்)

தியா சின்ன வயசுல சிலசமயம் அப்படி தூக்கி போடறது உண்டு. நா இத பாத்ததும் 'பாத்தியா? கைல இருக்கறத தூக்கி போட்ட? அப்பறம் அதே மாதிரி உன் தலைய புடிச்சி ஸ்கேல் எடுத்துட்டு வந்து டொப் டொப்  ன்னு அடி குடுப்பேன்.' ன்னு சொன்னேன்.

இமிடியட் ரிப்லை. "அப்பா அந்த மாதிரி நா பண்ணா, நீ அடிக்கணும்னா என்ன கூப்பிடு. முடிய  புடிக்க வேண்டாம். நானே வந்து அடி வாங்கிக்கறேன்."

(இன்னும் பெரிசாகி என்ன சொல்ல போகுதோ)

லொள்ளு நம்பர் 7:
தியா படிக்கற தமிழ்ப்பள்ளில annual day . தியா மூன்று பரிசுகள் வாங்கி அசத்திட்டா . நா வாலண்டீயர். என்னால முடிந்த உதவிகள் செய்வேன். பசங்க வரவர பரிசுகள் எடுத்து தரத்தும், அவங்கள ஒழுங்கா ஸ்டேஜ் விட்டு எறங்க வைக்கறதும் என்னை  பண்ண சொன்னாங்க. நா பரிசு எடுத்து கொடுக்கற ஒவ்வொரு டைம்-உம தியா ஸ்டேஜ் கீழ கிட்ட நின்னுக்கிட்டு எனக்கு cheer up  பண்றா. "Daddy ..daddy ... go  daddy.. yei" அப்டின்னு கத்தி கத்தி என்ன வெட்கத்தில் நெளிய வெச்சிட்டா. சோ ஸ்வீட். 


--------------------------------------------------------------------------------------------------------------
என் மகளுக்கு பிரியாணி ன்னா அவ்ளோ புடிக்கும். மூணு வயசுக்குள்ள பிரியாணி கூட அவ பண்ண ரவுசுகள சொல்றேன்.

1) ஹோட்டல பிரியாணி ஆர்டர் பண்ணி அது டேபிள்க்கு வரும்போதே 'ஹேய்...பிரியாணி.. பிரியாணி' ன்னு சந்தோஷத்துல கத்த ஆரம்பிச்சிடுவா.
2) சூடா வர பிரியாணில ஆவி பறக்கும்மில்ல? அத தொட்டு கண்ல ஒத்திக்குவா (தீபாரதனை மாதிரி)
3) ப்ளேட்ல வெச்சத சாப்பிட முடியாம கொஞ்சம் வெச்சிட்டா கெளம்பும்போது சோகமா 'bye பிரியாணி' ன்னு தட்டுக்கு டாட்டா காட்டிட்டு தான் வருவா. 



திருட்டுக் குட்டி