Tuesday, December 30, 2014

உடுக்கை கிழிந்தவன்

சின்ன வயசுல பள்ளி கூடத்துக்கு நானும் என் அண்ணனும் ஸ்கூல் பஸ் ல தான் போவோம். 
'இது என்ன பஸ் ஆ? இல்ல மீன் மார்க்கெட் ஆ' அப்பிடின்னு டிரைவர் அண்ணா திட்டற அளவுக்கு எப்பவும் ஒரே சத்தம்மா இருக்கும். அரட்டை, சண்டை, பாட்டுக்கு பாட்டு, தள்ளுமுள்ளு எல்லாம் நடக்கும். 

அன்னிக்கு ஒரு நாள்...அப்போ நான் நாலாவது படிச்சிக்கிட்டு இருந்தேன். 
.........@@@ @@.......
(சுருள் போட்டாச்சு இல்ல.. பிளாஷ்பேக் ஆரம்பம்). 

காலைல பஸ்ல போய்ட்டு இருந்தோம். லைட் பிரவுன் கலர்ல கோடு போட்ட சட்டை, அதே கலர்ல ட்ரௌசெர். 
டக் இன் பண்ணி ஷ்ஷு போட்டு வகிடு எடுத்து தலை வாரி.
வழக்கமான நாளா தான் ஆரம்பிச்சது. 
ஆனா அன்னிக்கு அப்படி ஒரு அசம்பாவிதம் நடக்கும்ன்னு நா நெனச்சிக்கூட பார்த்து இருக்க மாட்டேன்.

பக்கத்துல உக்கார்ந்து இருந்த சரவணன் கூட சண்ட போட, தள்ளுமுள்ளு நடக்க, நா சீட்ல இருந்து கீழ விழ...
மாமா ட்ரௌசெர் கிழிஞ்சிச்சு. நெஜமாவே கிழிஞ்சிடுச்சு. 
"எண் ஏழு வடிவத்தில் கிடைக்கோடு (horizontal line) மூன்று சென்டிமீட்டர்  செங்குத்து (vertical) நான்கு சென்டிமீட்டர் அளவில்" கிழிஞ்சி உள்ள போட்டு இருந்த பச்சை ஜட்டி அப்பட்டமா தெரியற மாதிரி ஆய்டுச்சு. 

பஸ் விட்டு இறங்க பேக் மாட்டும் போது தான் சரவணன் சொன்னான். 
'டேய்.. ட்ரௌசெர் கிழிஞ்சி இருக்குடா'. 
எனக்கு என்ன பண்றதுனே தெரியல. அண்ணன் முன்னாடியே அவன் நண்பர்கள் கூட இறங்கி போய்ட்டான். அண்ணன் போனா என்ன? மானம் காக்க நண்பன் இருக்கானே. சரவணன் ஐடியா குடுத்தான். 

'பேக் நல்லா லூஸா போடு.' 
'ட்ரௌசெர் மறையற அளவுக்கு லூஸ் பண்ணி மாட்டிக்கோ' 
'அப்பவும்  தெரியுதுடா' 
'சரி நீ முன்னாடி போ. நா உன் பின்னாடியே க்ளோஸா நடந்து வரேன்.' 

அப்படியே செஞ்சோம். எப்டியோ ஒரு வழியா தட்டுத்தடுமாறி கிளாஸ் ல வந்து ஒக்காந்தாச்சு.
சரவணன் சொன்னான்.
'என்ன ஆனாலும் சரி. இன்னிக்கு ஃபுல்லா நீ பெஞ்ச விட்டு எழுந்துக்காத' 
'டேய் லஞ்ச் டைம்ல க்ரௌண்டுக்கு போய் சாப்பிடணுமே டா'
'உனக்கு சோறு முக்கியமா? மானம் முக்கியமா?'

முடிவு செய்தேன். 
'இதோட சாயந்தரம் தான் எடத்த விட்டு எழுந்துக்கிறேன். எப்டி வந்தமோ அப்டியே போய் பஸ்ல ஒக்காந்திடனும்'
எடுத்த முடிவ வெற்றிகரமா செயல் படுத்தவும்முடிந்தது - ரெண்டாவது பீரியட் ஆரம்பிக்கும் வரை.

'Fifth standard B section கிளாஸ் யாருக்கு தெரியும்?' மிஸ் கேட்டாங்க.
'மிஸ். இவனுக்கு தெரியும் மிஸ். அது இவங்க அண்ணன் கிளாஸ்' முன்னாடி இருந்தவன் என்னை காட்டினான். 
'இங்க வாப்பா, இந்த நோட் எல்லாம் எடுத்துட்டு போய் அந்த கிளாஸ்ல வெச்சிட்டு வா'
போச்சுடா....... என்ன செய்யறதுன்னு முழிச்சிக்கிட்டு இருந்தேன். 

'எனக்கு கிளாஸ் தெரியாது மிஸ்' 
'எனக்கு தெரியும் மிஸ். நா எடுத்துட்டு போறேன்' சரவணன் உதவினான்.
ஹப்பாடா.
'ஓகே.. ரெண்டு பேரும் வந்து எடுத்துட்டு போங்க.'
அய்யையோ.
'என்னடா ஒக்காந்துக்கிட்டே இருக்க? எழுந்து வா' மிஸ் அதட்டினாங்க.
இதுக்கு மேல என்ன பண்ண முடியும்? எழுந்து போனேன்.

நா ஒக்காந்திருந்த கடைசி பெஞ்சில இருந்து ரெண்டு வரிசை தாண்டறதுக்குள்ள என் பின்னாடி ஒரே சலசலப்பு. முதல் மூணு வரிசை கேர்ள்ஸ் வேற. 
போய் குனிந்து நோட்ஸ் எல்லாம் தூக்கினேன்.  'டேய் ட்ரௌசெர் கிழிஞ்சி இருக்குடா ...டேய்.. டேய்' பின்னாடி இருந்து பசங்க கத்தறாங்க. நா காதுல வாங்கிக்காம நோட்ஸ் எல்லாம் தூக்கிகிட்டு நடந்தேன். 
கண்டிப்பா கேர்ள்ஸ், மிஸ் உட்பட மொத்த கிளாஸும் பார்த்து இருக்கும். கண்ணுல லைட்டா தண்ணி. 
வெளிய காட்டிக்காம எதுவும் காதுல வாங்கிக்காம யாரையும் பாக்காம கிளாஸ் விட்டு நடந்தேன். 
கூட சரவணன் கொஞ்சம் நோட்ஸ் தூக்கிட்டு வந்தான். இன்னும் யார்யார் எல்லாம் பாக்க போறாங்களோ? 

அண்ணன் கிளாஸ் ஸ்கூலோட இன்ணோரு கோடில இருக்கு.
சரவணன என் பின்னாடி நடந்து வர சொல்லிட்டு யோசிச்சிகிட்டே நடந்து போனேன். 
'சரவணா நா கிளாஸ் வெளியவே ஒளிஞ்சி நிக்கறேன். நீ போய் உன்னோட கைல இருக்கறத உள்ள வெச்சிட்டு வந்து என்னோடது வாங்கிட்டு போய் வெச்சிடு ஓகேவா?' 
'சரிடா. நீ இங்கயே இரு' 

சொன்னபடி செய்தான். நா அண்ணன் கிளாஸ் உள்ள போகவே இல்ல. 
மறுபடியும் ஹப்பாடா. 
சரவணன் வெளிய வந்து சொன்னான் 
'நல்ல வேலை எல்லாருக்கும் கிளாஸ் நடக்கறதுனால ஒரு பயலும் வெளிய இல்ல. இன்டர்வெல் டைம் ல வந்து இருந்தா கண்டிப்பா மாட்டி இருப்போம்' 
சொல்லி முடிக்கும் போதே இன்டர்வெல் பெல்அடித்தது.
மறுபடியும் அய்யையோ. 

நா அப்டியே சுவர் ஓரமா போய்  சாஞ்சிக்கிட்டேன். 
எல்லா கிளாஸ்ல இருந்தும் பசங்க எல்லாம் வெளிய வர ஆரம்பிச்சிட்டாங்க.
'என்னடா பண்றது?' 
'தெரியலையே' 
யோசிச்சோம். ஐடியா வந்தது.

'சரவணா. நாம எப்பவும் பஸ் விளையாட்டு விளையாடுவோமே?'
'ஆமா?'
'அதே மாதிரி நீ என்ன புடிச்சிக்கோ. நீ என் ட்ரௌசெர மறைச்ச மாதிரியும் இருக்கும். 
நாம வேகமாவும் இங்க இருந்து ஓடிடலாம்'
'சூப்பர் ஐடியா'

(பஸ் விளையாட்டு -- சிறார்களுக்கு மிகவும் பிடித்தமான இந்த விளையாட்டை ஆட இரண்டு நபர்கள் தேவை. முதல் நபர் பஸ் போன்று முன்னே நிற்க வேண்டும்.இரண்டாம் நபர் ஓட்டுனர் போன்று முதல் நம்பரின் பின்னால் நெருக்கமாக நின்று கொள்ள வேண்டும். இரண்டாம் நபர் முதல் நபரின் இரு கைகளையும் முழங்கைக்கு மேல பிடித்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு பிடித்துக்கொண்டு வலது கையை திருகினால் முடுக்கு (accelerator). இடது கையை அமுக்கினால் நிறுத்தம் (brake). தலை முடியை இழுத்தால் கியர். இரண்டாம் நபரின் இயக்கத்திற்கு ஏற்ப முதல் நபர் வாயால் 'டுர்ர்ர்ர்' என சத்தத்தை எழுப்பிக் கொண்டே ஓட வேண்டும்.) 

பஸ் விளையாட்டு வொர்க் ஆச்சு. கிளாஸ்ல வந்து ஒக்காந்தாச்சு. 
'ட்ரௌசெர் கிழிஞ்சி இருக்குடா' ன்னு சொன்ன எல்லாருக்கும் 'தெரியும் டா' ன்னு ஒரு வரில பதில் சொல்லி முடிச்சிக்கிட்டேன். நல்ல வேலையா அதுக்கு மேல யாரும் கிண்டல் பண்ணல. 

ஒரு வழியா சாய்ந்தரம் வரைக்கும் சமாளிச்சிட்டேன். இனிமே பஸ் வர வரைக்கும் சமாளிச்சா போதும். 
ஆனா ஸ்கூல் முடிஞ்சு ஒரு மணி நேரம் கழிச்சி தான் பஸ் வரும்.
வழக்கமா அது வரைக்கும் நான் என் நண்பர்கள் என் அண்ணன் அவன் நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து கிரௌண்டுக்கு போய் விளையாடுவோம். அன்னிக்கு நா வரல ன்னு சொல்லிட்டேன். 

அண்ணன் வந்து கேட்டான். simple conversation. ஆனா வாழ்க்கைக்கும் மறக்க மாட்டேன்.

'என்னடா?'
'ட்ரௌசெர் கிழிஞ்சிடுச்சுடா' காமிச்சேன். 
'அப்பறம் ஏன் டக் இன் பண்ணி இருக்க? ஷர்ட் எடுத்து வெளிய விட்டு கவர் பண்ண வேண்டியது தானே?'

அடச்ச்ச்ச்சய்ய்ய்ய். 
காலைல இருந்து இது எனக்கு தோணலயே. 

சட்டைய எடுத்து வெளிய விட்டுட்டு விளையாட போயிட்டேன். 

Thursday, October 23, 2014

கலாச்சாரத்தின் பரிணாம வளர்ச்சி

முன்னெல்லாம் 'இந்தியர், தமிழர் ன்னு சொல்லிக்க வெட்கப்படறாங்களே' ன்னு நிறைய கவலைப்படுவேன். ஆனா சமீப காலங்கள்ல ரொம்ப ஓவரா பெருமைப்பட்டுக்குறோமோ  ன்னு தோணுது. ஈமெயில் ல கண்டு பிடிச்சது தமிழன், மைக்ரோசாப்ட் CEO  இந்தியன் ன்னு ஆரம்பிச்சி, பொண்ணுங்க ஏன் பொட்டு  வைக்கறாங்க, மாடு ஏன் அம்மா ன்னு கத்துது ன்னு போய் இப்போ லேட்டஸ்ட்டா கமலஹாசன் எபோலா வரும் ன்னு அந்த காலத்துலேயே சொன்னாருன்ற  வரைக்கும் கொண்டு வந்துட்டாங்க.

இந்த மாதிரி எல்லாத்தையும் இந்தியர்கள் தான் கண்டு புடிக்கறாங்க ன்னு முன்னாடியே தெரிஞ்சி தான் 2012 ஹாலிவுட் படத்துல உலகம் அழிய போகுது ன்னு இந்தியன் தான் பர்ஸ்ட் கண்டுபிடிக்கறான் ன்னு காட்டி இருக்காங்க. (அயய்யோ நானும் மாறிட்டேனே) 

நண்பர் ஒருத்தர் இது ரிலேட்டடா பேசும் போது டய்மிங்க்கா ஒரு கதைய ஞாபகப்படுத்தினார். ஏற்கனவே தெரிஞ்சாலும் பெட்டி செய்தியா அது இதோ. 
சைனாக்காரன் அவங்க ஊர்ல அகழ்வாராய்ச்சி பண்ணும் போது மண்ணுக்குள்ள copper wire  பதிஞ்சி இருந்தத கண்டு பிடிச்சானாம். உடனே எல்லா உலக விஞ்ஞானிகள கூப்பிட்டு சொன்னானாம் 'பாத்திங்களா? அந்த காலத்துலேயே நாங்க டெலிபோன் கனேக்க்ஷன் வெச்சி இருந்தோம்'.
ரஷ்யாக்காரன் அவங்க ஊர்ல அகழ்வாராய்ச்சி பண்ணும் போது மண்ணுக்குள்ள fiber  optic cable பதிஞ்சி இருந்ததாம். உடனே எல்லா உலக விஞ்ஞானிகள கூப்பிட்டு சொன்னானாம் 'பாத்திங்களா? அந்த காலத்துலேயே நாங்கஇன்டர்நெட் கனேக்க்ஷன் வெச்சி இருந்தோம்'. இந்தியன் பார்த்தான். ஊருக்கு போய்  அவனும் நிலத்த தோண்டினான். எல்லா உலக விஞ்ஞானிகள கூப்பிட்டு காட்டினான். 'என்னயா? ஒண்ணுமே இல்லையே' ன்னு விஞ்ஞானிகள் கேட்டாங்க. இந்தியன் 'பாத்திங்களா, ஒரு wire-ம் இல்ல. அந்த காலத்துலேயே நாங்க wireless communication வெச்சி இருந்தோம்' ன்னு சொன்னானாம் 
'மனிதனும் மர்மங்களும்' புத்தகத்துல மதன் சொல்றாரு 'கூட்டுப்ரார்த்தனை, நெற்றிக்கண் ' எல்லாத்துக்கும் ஒரு அர்த்தம் இருக்கு. விஞ்ஞானிகள்  இப்போ தான் கண்டுபிடிக்கறாங்க ஆனா நாம ரொம்ப வருஷமா இத தெரிஞ்சி வெச்சி இருக்கோம்' ன்னு. இந்த மாதிரி விஷயங்கள்ல ஒரு pattern இருக்கு. அதாவது நாம ஒரு விஷயம் எதுக்கு பண்றோம்ன்னு தெரியாம பரம்பர பரம்பரையா செஞ்சிக்கிட்டு வருவோம். வெள்ளகாரன் தான் நமக்கு கண்டு புடிச்சி சொல்லுவான் 'தமிழன்  இத முன்னாடியே தெரிஞ்சி வெச்சி இருக்கான்' ன்னு. நமக்கும் அப்போ தான் தெரிய வரும். இருந்தாலும் காலர தூக்கி விட்டுக்குவோம். இதுக்கும் ஒரு (தெரிஞ்ச) கதை சொல்றேன். 

பலநூறு வருஷங்கள் முன்னாடி, முனிவர் ஒருத்தர் குருக்குலத்துல பாடம் சொல்லி  கொடுத்தாராம். அங்க ஒரு பூனை சுத்திக்கிட்டே இருந்துச்சாம். பசங்களுக்கு கவனம் சிதறுதே ன்னு அத அங்க இருக்க ஒரு தூண்ல கட்டி போட சொன்னாராம். 'இனிமே தினமும் நா படம் நடத்தும் போது  இந்த பூனைய கட்டி போட்டுங்க' ன்னு சொன்னாராம். சிஷயர்கள் இத ரொம்ப நாளைக்கு பின்பற்றி இருக்காங்க. அந்த முனிவர் இறந்து போய் அவரோட தலைமை சிஷ்யர் ஒருத்தர் குரு ஆனாராம். அடுத்த நாள் அவர் பாடம் நடத்த வரும்போது அங்க சுத்திக்கிட்டு இருந்த பூனைய காணோம். புது குரு பதட்டம் ஆயிட்டார். 'சிஷயர்களே, உடனே போய் ஒரு பூனைய புடிச்சிக்கிட்டு வாங்க. அத தூண்ல கட்டாம பாடம் எடுக்க கூடாது ன்னு உங்களுக்கு தெரியாது?' ன்னு சத்தம் போட்டாராம். 
அந்த கதையோட extension . (படம் முடிஞ்சி டைட்டில் போட்டு முடிச்சதும் ஒரு சீன் இருக்குமே அது மாதிரி). இப்படியே ரொம்ப வருஷம் ஏன் பண்றோம் ன்னு தெரியாம இந்தியர்கள் பூனையை கட்டிப்போட்டுபாடம் நடத்திக்கிட்டு இருக்காங்க. பல நூற்றாண்டுகள் கழிச்சி விஞ்ஞானிகள்  'பூனைய பக்கத்துல வெச்சிக்கிட்டு படிச்சா பர்ஸ்ட் ரேங்க் எடுக்கலாம். இத தான் இந்தியர்கள் பல நூறு வருஷங்கள் முன்னாடில இருந்து செஞ்சிக்கிட்டு இருக்காங்க' ன்னு கண்டு பிடிக்கறாங்க. உடனே நம்ப பசங்க 'நாங்க எல்லாம் அப்போவே அப்பிடி..ஆஹ்ங்' ன்னு பேஸ்புக் ல போட்டுக்கறாங்க.   

'சரி நைனா இப்போ இன்னா தான் சொல்ற ?'

என்ன சொல்றேன்னா 
ஒன்னு) நம்ப குருட்டுத்தனமா ஃப்பாலோ பண்ற பல விஷயங்கள ஏன் பண்றோம் ன்னு தெரிஞ்சி வெச்சிக்கணும். 'ஆதி தமிழன் ஆண்டவன் ஆனான். மீதி தமிழன் அடிமைகள் ஆனான்' ன்னு பில்லா படத்துல அஜித் சொல்லி இருக்காரு. சோ ஆதி தமிழன்/இந்தியன் பண்ணதுக்கு என்ன அர்த்தம் ன்னு தெரிஞ்சிக்கணும்.
ரெண்டு) புதுசு புதுசா க்ரியேடிவ்வா நிறைய கண்டு பிடிக்கணும்.

இவளோ பெரிய பழைய நாகரிகத்த வெச்சி இருக்க நாம இன்னும் நிறைய கண்டு புடிச்சி இருக்கலாம். ஆதி தமிழன்/இந்தியன் நிறைய கண்டு புடிச்சி தான் இருக்கான். நடுவுல தான் 'உணவே மருந்து மருந்தே உணவு', 'குந்தித் தின்றால் குன்றும் கரையும்' ன்னு நம்ம கான்சென்ட்றேஷன் எல்லாம் சாப்பாட்ல போய்டுச்சு ன்னு நெனைக்கறேன். 

எல்லாம் ஒரு வேலை கல்வி முறை மாறினதுனாலயோ? ஒழுங்கா குருக்குல கல்வி இருந்திருக்கலாம். புதன் கிரகத்துக்கு ராக்கெட் விட சொல்லி குடுத்த நம்ப கல்வி, புலி முன்னாடி பதினைஞ்சு  நிமிஷமா ஒக்காந்திருந்தும் எப்படி உயிர் பிழைக்கறதுன்னு சொல்லி தரலையே. 

'இவளோ சொல்றியே நீ என்னடா பண்ண' ன்னு கேக்குறீங்களா?' அவளோ அறிவு இருந்தா நா ஏங்க  இங்க வெட்டியா பேசிக்கிட்டு இருக்கப் போறேன்.

பி.கு. இத படிச்சிட்டு நா தமிழன இழிவு படுத்தறேன் ன்னு நெனைக்காதீங்க. தமிழன் ன்ற பெருமை எப்பவுமே உண்டு. ஆனா கர்வம் கெடையாது. "நா தியாகி இல்ல..அதே சமயத்துல துரோகியும் இல்ல" (மாப்ள எங்கயோ கேட்ட மாதிரி இல்ல? )

Tuesday, October 14, 2014

திருட்டுக் குட்டி

என் பொண்ணு பண்ற லொள்ளுத்தனங்கள இந்த ஊர் உலகத்துக்கு தெரிய படுத்தனும்னு ரொம்ப நாளா  நெனச்சிக்கிட்டு இருந்தேன். இன்னிக்கு தான் நேரம் வந்து இருக்கு. வீட்டுக்கு வரவங்க எல்லாம் 'இந்த நல்ல புள்ளைய பத்தி complaint  பண்றியே ' ன்னு  என்னை கேக்கறாங்க. அவ பண்ற லொள்ளுங்கள இனி இங்க போட்டுகிட்டே வர  போறேன்.

லொள்ளு நம்பர் 1:
அவ தமிழ் கிளாஸ் ல பாட்டு சொல்லி கொடுத்து இருக்காங்க.
"ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரே பூ பூத்துச்சாம்"

அவளுக்கு அது சரியா சொல்ல வரல. சரி நாம அத அவளுக்கு புரிய வெச்சோம்னா  அவளுக்கு சொல்றதுக்கு ஈஸியா இருக்குமேன்னு கொஞ்சம் இங்கிலீஷ் கலந்து 'pot  ல plant  இருக்கும். தண்ணி நா வாட்டர். பூ ன்னா  flower.. தண்ணி ஊத்தினா பூ பூக்கும்' ன்னு எக்ஸ்ப்ளெயின் பண்ணேன். ஆனா நம்ப பசங்க தான் நாம சொல்றத கேக்கறதே இல்லையே.

'நோ அப்பா. அப்டி இல்ல. நா சொல்றேன் கேளு. தண்ணி நா வாட்டர். poopoo  ன்னா  (from  'poo poo'த்துச்சாம்) poopoo. ஒன்  தண்ணி குடிச்சா  ஒன் poopoo வரும். டூ தண்ணி குடிச்சா டூ poopoo  வரும். '

சிரிச்சி சிரிச்சி எனக்கு கண்ல தண்ணியே வந்துடுச்சு.

லொள்ளு நம்பர் 2:
வீட்டுக்கு வந்திருந்த இன்னொரு குழந்தை கூட இவ டாய்  ஷேர் பண்ணல. ஒரே அடம். கடைசியா இவ கிட்ட இருந்து வாங்கி அந்த குழந்தை கிட்ட குடுத்துட்டோம். இவ கோவிச்சிக்கிட்டு ரூம் விட்டு போய் சோபா ல படுத்துக்கிட்டு ஒரே அழுகை. நல்ல விதமா சொன்னா புரிஞ்சிக்குவா ன்னு போய் விளக்கம் குடுத்தேன். 'அவ சின்ன கொழந்தை. நீ தான் பெரிய பொண்ணு. நீ தான் விட்டுக்கொடுக்கணும். நீ இப்போ டாய் ஷேர் பண்ணா தான் அவங்க வீட்டுக்கு போகும்போது அவ டாய் உனக்கு ஷேர் பண்ணுவா. எல்லாரும் உன்ன குட் கேர்ள் ன்னு சொல்லுவாங்க' ன்னு ஒரு பத்து  நிமிஷம் பேசினேன். நா சொல்றத எல்லாம் லைட்டா அழுதுக்கிட்டே உம் கொட்டி கேட்டுட்டு இருந்தா. நா எல்லாம் சொல்லி முடிச்சு 'ஒக்கே வா' ன்னு கேட்டேன்.
'அப்பா நீ இப்போ நல்லா சொன்னியே..(ஒருநொடி பெருமை பீலிங்க் எனக்கு)..... திருப்பி சொல்லு (பெருமை பீலிங்க் புஸ்ஸுன்னு போய்டுச்சு)'

லொள்ளு நம்பர் 3:

கவின்-உம் தியா-வும் சேர்ந்துட்டா யாராலயும் எதுவும் பண்ண முடியாது. ரெண்டு பேரும் பாசமா இருப்பாங்க. அதே நேரத்துல சண்டையும்  போட்டுக்குவாங்க. எல்லாமே போட்டி தான். 'I  win ' 'I can jump higher' ன்னு எல்லாமே competition. ஓடிக்கிட்டே இருப்பாங்க. புடிச்சி வைக்க முடியாது. மிரட்டினாலும் மதிக்க மாட்டாங்க  ஒரே பயம் 'போலீஸ்'

ஷாப்பிங் மால் போனோம் போன வாரம். அங்க இருந்த சோபா ல ஒக்காந்து வெயிட் பண்ணிட்டு இருந்தோம். வழக்கம் போல தியாவும் கவினும் ஓட ஆரம்பிச்சிட்டாங்க. அங்க நடந்து போறவங்களுக்கு ஒரே disturbance. நானும் ரெண்டு மூணு தடவ சொல்லி பாத்துட்டேன். அடங்கவே இல்ல. போலீஸ்க்கு கால் பண்ணிடுவேன் ன்னு போன் எடுத்து காட்டினேன். பயந்து போய்  அமைதியா ஒக்காந்துட்டாங்க  கொஞ்ச நேரம் தான். மறுபடியும் ஓட ஆரம்பிச்சிட்டாங்க. எவ்வளோ நேரம் தான் நா போலீஸ்க்கு கால் பண்ற மாதிரி நடிக்கறது?  சுத்தி சுத்தி பாத்ததுல ஒரு கடைக்கு மேல ஒரு கேமரா இருந்தது. ஐடியா!

ரெண்டு பேரையும் கூப்பிட்டு 'நா போலீஸ்க்கு கால் பண்ணி சொல்லிட்டேன். அதோ ஒரு கேமரா இருக்கு பாருங்க. அவங்க அங்க இருந்து உங்கள வாட்ச் பண்ணிடே இருக்காங்க. நா கை அசைச்சா போதும். உங்கள வந்து கூட்டிட்டு போய்டுவாங்க. ஒழுங்கா போய் உக்காருங்க.' ன்னு சொல்லிட்டேன். ரெண்டு பெரும் அமைதியா போய்  சோபா ல ஒக்காந்துக்கிட்டாங்க.

கொஞ்ச நேரம் ஒழுங்கா தான் இருந்தாங்க. அப்பறம் தியா நைசா சோபா ல இருந்து இறங்கி போனா. நா சைலண்ட்டா பாத்துக்கிட்டே இருந்தேன். அங்க இருந்த advertisement board  பின்னாடி போய் நின்னுக்கிட்டு 'கவின் கவின் கம் ஹியர்' ன்னு whispering  வாய்ஸ் ல கூப்பிட்டா. அவன் அப்பாவியா எழுந்து போனான். போர்ட்ல ஏதோ அவனுக்கு காமிக்கற மாதிரி காட்டிட்டு அவன் அத பாத்துகிட்டு இருக்கும் போது  குடுகுடு ன்னு என்கிட்ட ஓடி வந்து 'அப்பா அப்பா கவின் அங்க நிக்கறான். சீக்கிரம் போலீஸ்க்கு கால் பண்ணு' ன்னு சொல்லிட்டு கடை மேல இருந்த கேமரா பாத்து கை அசைச்சு கூப்பிட ஆரம்பிச்சிட்டா.

லொள்ளு நம்பர் 4:
இது அவ தொணதொணன்னு கேள்வி கேக்கற ஸ்டேஜ் போல. ஏன் ஏன் ஏன் ன்னு நச்சரிச்சிக்கிட்டே இருப்பா. நான் ஓரளவுக்கு அவளுக்கு எல்லாம் பதில் சொல்லிடுவேன். ஆனா விடாம ஏன் ன்னு கேட்டுட்டே இருப்பா.

'ஏன் humans எல்லாம் ரெண்டு கால்ல நடக்குறாங்க? animals எல்லாம் நாலு கால்ல நடக்குறாங்க?' ன்னு கேட்டா. சரி நாம புத்திசாலி தனமா இப்போவே evolution  பத்தி சொல்லி தரலாம் ன்னு 'Monkeys ல இருந்து humans  வந்தாங்க. கொஞ்சம் கொஞ்சமா நாலு கால்ல இருந்து ரெண்டு கால்ல நடக்க கத்துகிட்டாங்க' ன்னு சொன்னேன். 'ஏன் monkeys  மட்டும் humans ஆனாங்க? ஏன் மத்த animals  ஆகல?' நா என்னத்த சொல்லுவேன்? 'அது அப்படி தான். God  வந்து இந்த world  create  பண்ணும்போது அப்படி தான் பண்ணாரு' ன்னு சொல்லிட்டு அடுத்து அவ God  நா யாரு ன்னு கேட்பாளே என்ன சொல்றது ன்னு யோசிச்சிட்டு இருந்தேன். அதிசயமா அவ அமைதி ஆய்ட்டா.

நம்ம வாய் தான் சும்மா இருக்காதே. 'God நா யாரு தெரியுமா?' ன்னு கேட்டேன். 'ஓ தெரியமே' ன்னு சொல்லிட்டா. (எங்க வீட்ல சாமி எல்லாம் இருக்கு. பட் அவளுக்கு சாமி ன்னு ஒரு toy  மாதிரி தான் தெரியும். God  ன்னு english ல தெரியாது ன்னு நெனச்சிட்டு இருந்தேன்)

'சரி God ன்னா  யாரு?'
'ரெட் ட்ரெஸ் போட்டு இருப்பாங்களே'
'(ஆதி பராசக்தி யா) சரி ஓரளவுக்கு ரைட்டு'
'fight  பண்ணுவாங்களே'
'(evil  fight  பண்றத சொல்றாளோ) அப்பறம்?'
'கைல long  spear  வெச்சி இருப்பாங்களே'
'(வேல் வெச்சி இருக்கறத சொல்றாளே. இது சாதாரண கொழந்தை இல்ல. தெய்வ கொழந்தை ன்னு நெனச்சிகிட்டு  புல்லரிச்சிகிட்டே இருக்கும் போது அடுத்து சொன்னா
'Princess  Sofia  ல வருவாங்களே'
இப்போ நா confuse  ஆய்ட்டேன். Sofia the first கார்ட்டூன் நானும் தான் பாக்கறேன்.அதுல எங்க God  வருது?
'அதுல எங்க வராங்க?'
'வருவாங்க, Princess Ivy கூட'

அப்போ தான்  ஸ்டரைக் ஆச்சு.
'அம்மு, நா சொல்றது God . நீ சொல்றது Gaurd' ஒரு நிமிஷம் என்னோட கற்பனைய  நெனச்சி சிரிச்சிக்கிட்டேன் .

லொள்ளு நம்பர் 5:
'அப்பா. என் கூட விளையாடாத. தாடி குத்துது'
'மறுபடியுமா? இப்போ தானே ஷேவ் பண்ணேன்'
'திரும்ப திரும்ப திரும்ப வந்துட்டே இருக்கு'
'சரி, தாடி ஏன் முளைக்குது?'
'அது .. அது நேத்து நீ ஆபீஸ் போன. அப்போ கார்ல போகும் போது  குடை எடுத்துட்டு போகல'
'சோ?'
'மழை பெய்ஞ்சுதா... அப்போ டிராப்ஸ் எல்லாம் உன் கன்னத்துல பட்டுடுச்சு.. அதான் தாடி வந்துடுச்சு.'

தண்ணி ஊத்தி வளர்க்க அது என்ன மரமா? 

லொள்ளு நம்பர் 6:
தியா-விற்கு அவளோட ஹேர் ஸ்டைல் மேல ஒரு இது.
ஆத்திச்சுடி சீரீஸ்  ஸ்டோரீஸ் பாப்போம் யூடியுப் ல.
ஒவ்வொரு ஆத்திச்சுடி க்கும் ஒரு ஸ்டோரி வரும். 'ஆறுவது சினம்' ஸ்டோரில ஒரு பையன் கோவத்துல கைல இருக்க ரிமோட்ட  தூக்கி போட்டுடுவான். அவங்க அம்மா அவன் தலைமுடிய புடிச்சி ஸ்கேலால அடிப்பாங்க. (அதுக்கு அந்த பையன் கோச்சிக்கிட்டு சாப்பிடாம ஸ்கூல் போய் அங்க மயக்கம் போட்டுடுவான். அப்ப ஒரு நல்ல பொண்ணு சாப்பாடு குடுத்து 'கோவபடாத.ஆறுவது சினம்' ன்னு சொல்லும்)

தியா சின்ன வயசுல சிலசமயம் அப்படி தூக்கி போடறது உண்டு. நா இத பாத்ததும் 'பாத்தியா? கைல இருக்கறத தூக்கி போட்ட? அப்பறம் அதே மாதிரி உன் தலைய புடிச்சி ஸ்கேல் எடுத்துட்டு வந்து டொப் டொப்  ன்னு அடி குடுப்பேன்.' ன்னு சொன்னேன்.

இமிடியட் ரிப்லை. "அப்பா அந்த மாதிரி நா பண்ணா, நீ அடிக்கணும்னா என்ன கூப்பிடு. முடிய  புடிக்க வேண்டாம். நானே வந்து அடி வாங்கிக்கறேன்."

(இன்னும் பெரிசாகி என்ன சொல்ல போகுதோ)

லொள்ளு நம்பர் 7:
தியா படிக்கற தமிழ்ப்பள்ளில annual day . தியா மூன்று பரிசுகள் வாங்கி அசத்திட்டா . நா வாலண்டீயர். என்னால முடிந்த உதவிகள் செய்வேன். பசங்க வரவர பரிசுகள் எடுத்து தரத்தும், அவங்கள ஒழுங்கா ஸ்டேஜ் விட்டு எறங்க வைக்கறதும் என்னை  பண்ண சொன்னாங்க. நா பரிசு எடுத்து கொடுக்கற ஒவ்வொரு டைம்-உம தியா ஸ்டேஜ் கீழ கிட்ட நின்னுக்கிட்டு எனக்கு cheer up  பண்றா. "Daddy ..daddy ... go  daddy.. yei" அப்டின்னு கத்தி கத்தி என்ன வெட்கத்தில் நெளிய வெச்சிட்டா. சோ ஸ்வீட். 


--------------------------------------------------------------------------------------------------------------
என் மகளுக்கு பிரியாணி ன்னா அவ்ளோ புடிக்கும். மூணு வயசுக்குள்ள பிரியாணி கூட அவ பண்ண ரவுசுகள சொல்றேன்.

1) ஹோட்டல பிரியாணி ஆர்டர் பண்ணி அது டேபிள்க்கு வரும்போதே 'ஹேய்...பிரியாணி.. பிரியாணி' ன்னு சந்தோஷத்துல கத்த ஆரம்பிச்சிடுவா.
2) சூடா வர பிரியாணில ஆவி பறக்கும்மில்ல? அத தொட்டு கண்ல ஒத்திக்குவா (தீபாரதனை மாதிரி)
3) ப்ளேட்ல வெச்சத சாப்பிட முடியாம கொஞ்சம் வெச்சிட்டா கெளம்பும்போது சோகமா 'bye பிரியாணி' ன்னு தட்டுக்கு டாட்டா காட்டிட்டு தான் வருவா. 



திருட்டுக் குட்டி

Tuesday, April 8, 2014

வேல கெடச்ச பட்டதாரி

Inniku kalaila ezhunthathum 'modhal velayaa inniku oru post podanum' nu nenachen. Aana 'mudhal vela' pathiye post pannuven nu nenaikala..Manaivi amayarathu mattum ila.. vela amayarathum iraivan kudutha varam than. Ellar kitayum mudhal vela kedachatha pathi oru kadha irukkum. Idhu ennoda kadhai.

'College mudichathum enna da panna pora?' 'Vela thedaren ndra per la nalla oor sutha poren'
Athu than ennoda mana nilai. 'Nalla padichi nalla percentage vechi iruntha annanukke vela oru varusham kazhichi than kedachathu. Namakku enga kedaika poguthu?' nu manasula oru bajji sollichu.
First roundukke yaarum nammala koopida porathu ila nu oru asaathiya nambikai. Aana 'Naama onnu nenaikarom. avan vera onnu nenaikaraan'.

'Podhu makkalukku oru narcheithi. Off campus nadaka irukirathu. Ore kuttai la poi vizharathukku neria mattaigal thevai.' Entha company nu kekareengala? Oru example ku Infosys nu vechikangalen. (Yen master eppavum ithe stepa podareenga.. Ithu onnu than enaku theriyum)

Oru vaaram ozhunga padichen. padikarano ilayo book koodave vechi irunthen.

Sunday... new college vaasal la poi erangina ondra kilometer ku queue.
'ayayo.. line rombha perisa irukke.. padathuku late aaidume' nu ore kavalai.
'Sari line evalo thoram poguthu nu poi paakalam' nu munnadi nadanthen.

Oru arai kilometer thaandinathum 'Dei nee inga enna da panra?' college thozhiyin kural.
'Ila off campus vechi irukaanga ila..athan'
'Athan.. nee enna panra' nu kettuta.
Santhosham nu mela nadanthen.

'dei..jeeva' nu innoru nanbanin kural.
'Enna macha.. nee vara nu oru vaartha solli irukalam ila' nu ennamo avan sondha veetuku vantha maathiri ore paasamazhai. Apdiye pesikite line naduvula avanuku munnadi ninukiten. (athaane namma india kalaachaaram).

Infosys kita pudicha vishayam. Narukku nu pathu kelvi thaan kepaan. Athuvum Mathematics la...Group discussion, technical round, lottu losukku ellam kedayathu. Mukki munagi 8 question correcta ezhuthi peru moochu vittu nimirntha aduthu english questions. (Namake english test a? Ethana Hindhu papera edaiku pottu iruppom). Athayum mudichutu kelambalam nu paatha result innike solliduvom wait pannunga nu soltaanga.

Nanbargaloda arai naal arattai. Saayangaalam aiduchu. Result ellam notice board la ottaranga nu therinju ellarum odi poitaanga. Naanum enna maathiri nambikai selvangalum (vela kedaikaathu ndra nambikkai) gate kitaye bike la okanthu kadha adichikitu irunthom.
Munnadi sonna kalloori thozhi result paathutu veetukku kelambi poikitu iruntha. Pora pokula oru pokran kunda pottutu poita 'Hey jeevan un peru antha boardla irukku da'
Kaathula asanjikitu iruntha thennai maram apdiye stop aaiduchu.. paraivagal ellam stop block la parakkaama ninudchu. Kadal alai enna aagi irukkum nu ungaluku solla theva ila.

Adutha kattama nermuga thervukku koopturunthaanga. Semi finals la sema adi adichi finals pona india team maathiri ore confidence. Ulla nuzhanja oru margo soap auntyum oru horlicks maama vum okanthutu irunthaanga. Horlicks maama va paathathume confidence ellam kaanama poiduchu.
'Yenda...enna theriyium iruntha patta pagala banka kolla adipa?' nu kekara maathiri oru paarva.
Enna kalavara padutha athu pathaathu nu kaila ennoda written test answer sheet vera.
Naama maths problems solve panra latchanam than theriyume. Question ku munnadiye namaku answer therinjidum. Aana atha eppadi step by step kondu varathu nu than theriyaathu. Mela irunthu oru naalu step correcta irukkum. Aparam answer la irunthu reverse la step poduvom. Naduvula eppadiyavathu join pannida vendiyathu thaan.

'Tell me about yourself'
Kannadi munnadi practice pannathu ellam maranthuduchu.
'Hai i am.. (hehem).. Hi I am.. (hehehem)' starting trouble ila. Vandi starte agala.
'Oh.. information technology. i thought it was @#$@#!@#.. ha ha ha' Margo soap aunty etho comedy solli sirichathu. Naa sirikala. Purinja thaane sirikarathuku.
Oru mudivuku vanthen. 'Vantha mala, pona..... veetuku' nu thayaar aanen.

Horlicks maama adutha over pottaaru. 'Lets say you have some 1 rupee coin, some 50 paise coin, some 25 paise coin. How many coins you will give to make 700 rupees'.
Ketta udane avara mudika vidaama adichen parunga oru sixer. '699 one rupees, 1 50 paise and 2 25 paise sir'. Margo soap sirichiduchu. Horlicks soodaaiduchu. 'You didnt let me finish. The number of coins should be equal'.'Atha mudhalaye sollanum ila' nu nenachikitu paper pena va eduthen. Solve pannen.
Adutha ball.
'Your english scores here are not so good. What do you say about that?'
'I am sure i did very well. But i can learn from mistakes'
'Oh so if we send you onsite, should we send an assistant with you to correct your mistakes?'
Avamaanam. Aathiram. Azhugai. Ellam manasukkula.
Innum oru naalu thadava asinga paduthitu than veliya vitaanga.

Pora vazhi ellam ore polambal. 'English scores nalla ila na aparam enda interview ku koopidreenga. neenga ileena innoru company.'

pathu naal kachichi innoru college thozhi call panna. 'Hey, company la irunthu email anuparanga ellarukkum. naa select aaiten. unaku mail vanthiruka paaru'.
'Kaaliyaatha.. maariyaatha' nu computer la login panni paathen. 'Adichaan paaru appointment order'
Vela kedachiduchu. Namba mudiyaama en annana koopitu paaka sonnen. 'Saadhichitom la' nu ore santhosham. 'Mysore la moonu maasam traininga? avalo naal epadi thaniya irupa? intha vela venaam' nu amma vin kavalaya nenachi sirichikiten.
.
.
.
Padam mudinjiduchu nu ezhunthu poidaatheenga. Inime than twiste. Oru chinna vishayam solla maranthuten.
Chumma irukatume nu anna university la oru moonu arrear vechi irunthen. Athoda result innum varala. Athukulla vela kedachiduchu.
.
.
.
Akkam pakkam visarichathula 'result varathuku munnadiye company la senthukalam. but pass agala na veetuku anupiduvaanga' nu soltaanga. Marupadiyum 'kaaliyaatha.. maariyaatha' thaan.

Training ku kelambara modhal naal varaikkum result varala. Anna university ke poiten. Anga enna maathiriye neria per. Anga iruntha madam oru naalu mani neram wait panna vechiduchu. Evening aaiduchu. Nalaiku mysore ku train. En kooda iruntha pasanga ellam result vaangitu poitaanga. Work panravanga ellarum veetuku kelamba arambichitaanga.
Aparam antha madam kita poi konjam lighta satham pottom 'Evalo nerama wait panrathu.. matha ellarukum kuduthuteenga. innum enaku mattum yen tharala' nu.
'nalaiku vaa pa' nu soltaanga. Ore tension. Innum azhuthi kettathum than sonaanga
'nalla marka iruntha innike kuduthu irupen. mathavanga ellam pass aitaanga. athan avangala kuduthu mudichiten'.

En mana nilai enna maathiri irunthathunu enaku solla theriyala. seidhi manasula pathiyave konja neram aachu.
Aparam than antha madam kita sonnom. 'Infosys la vela kedachiduchu madam. nalaiku training ku mysore poren. pass o fail o enaku letter innike venum' nu.
Antha madam innum oru 20 minutes kazhichi oru sealed envelope kondu vanthu kuduthaanga.
'Itha pirika koodathu. Ellarukum epo result varutho appo than pirikanum. Or unga employer pirikalam. ekkaranatha kondum nee pirika koodathu' nu solli kuduthaanga.

Idupulaye time bomb kattina maathiri antha letter a vechikitu ondra maasam training ponen.
Entha nerathula result varumo, entha nerathula veetuku anupuvaangalo nu eppavum oru bayam.
Kadaisila ellarum arrear result vantha anniku than antha lettera pirichi paathen. just pass. Ondra maasam sethu vecha oru peru moochu vanthathu.

Sonthakaranga ellam 'paaru antha paiyan college mudichaan. ore maasathula velaiku poitaan. Pulla na athu pulla.' nu nenachikitu irukaanga. enna nadanthathu nu namaku thaane theriyum.

So, moral of the story enna?.
'yaarukum ethuvum easya kedaikarathu ila'
'nambikai ya mattum ezhanthida koodathu'
'Aduthavan figure ku aasa pada koodathu'  oops, intha moral intha story ku ila.

Mudhal vela than namma maanam mariyadhai ya nilai niruthuthu ila? antha vagaila infosys pala perukku oru dream company. Enakum.

Friday, January 24, 2014

தற்செயலானவுடனிகழ்ச்சிகள்

'ஏழுக்கடல் தாண்டி உனக்காக வந்தேனே..இந்த நதி வந்து கடல் சேருதே. வெண்ணிலவை வெட்டி மோதிரங்கள் செய்வேனே. அது உனை சேர ஒளி வீசுமே '

ரேடியோ-வில் பாட்டு ஓடிக்கொண்டிருந்தது.
ஹாஸ்டல் முதல் மாடியில் இருக்கும் தன பால்கனியில் அமர்ந்து சனிக்கிழமை இரவை ரசித்துக்கொண்டிருந்தாள் ஆர்த்தி.
வயிறு பசித்தது.. 'எங்க போனா இந்த சங்கி?'.. மறுபடியும் ஒருமுறை எஸ்.எம்.எஸ். அனுப்பினாள்.
'வெய்டிங் ஃபார் யு. கம் குயிக். அயம் ஸ்டார்விங்'
செண்ட் பட்டன் அழுத்துவதற்குள் வந்து நின்றது ஒரு கருப்பு நிறக்  கார்.
ஐந்து நிமிடம் ஆகியும் வண்டியில் இருந்து யாரும் இறங்கவில்லை.
ஆர்த்தி அந்த காரை அடையாளம் கண்டுக்கொண்டாள். சிறிது நேரம் கழித்து சங்கி இறங்கினாள். காரில் உள்ளவருக்கு கை அசைத்துவிட்டு மாடி ஏறி அறைக்கு வந்தாள்.

ஆர்த்தி சங்கி-க்கு  கதவை திறந்தாள்.
'ஏய் திருடி. கார்ல என்ன நடந்தது சொல்லு. வந்து அஞ்சு நிமிஷம் ஆகியும் நீ எறங்கவே இல்ல?'
சங்கி வெட்கப்பட்டு, அதை மறைக்க முடியாமல் மழுப்பினாள்.
'உனக்கு பசிக்குதுன்னு சொன்ன இல்ல? வா சாப்பிட போலாம்'
'பார்றா... திடீர்ன்னு அக்கறை.. அதெல்லாம் அப்பறம் சாப்பிடலாம். நீ சொல்லு. ரொமான்ஸ்ஸா? இன்னும் கல்யாணம் ஆக மூணு மாசம் இருக்கு. அதுக்குள்ள நீ மாசம் ஆய்டாத'
'போடி..' சங்கி பொய்யாக அடித்தாள் .

இருவரும் ஹாஸ்டல் மெஸ் போக தயாரானார்கள். சங்கி தலை முடியை பிரித்து மீண்டும் வாரிக்கொண்டாள். ஆர்த்தி முகம் கழுவிக்கொண்டே கேட்டாள்.

'ஹே சங்கி. எப்போ உன் ஆள எனக்கு இன்ட்ரோடியுஸ் பண்ண போற?'
'சஸ்பென்ஸ்...'
'அட்லீஸ்ட் பேராவது சொல்லுடி'
'எதுக்கு? என்ன ஓட்டறதுக்கா? மேரேஜ் இன்விடேஷன் தரும்போது நீயே பாத்துக்கோ'
'அடிங்..பல்ல ஓடைப்பேன். என் ஆள பத்தி மட்டும் எல்லாம் கேட்ட இல்ல?
'ஆமா. ஆனா உன் ஆளு பேர நீ சொல்லல இல்ல?'
'நீ சொன்னா தான் நா சொல்லுவேன்'
'நீ சொன்னா தான் நா சொல்லுவேன்'
இருவரும் முறைத்தார்கள். சிரித்தார்கள்.. மெஸ் நோக்கி நடந்தார்கள்.

சாப்பிட்டு முடித்து அறை திரும்பி உள்ளே நுழையும்போதே சங்கியின் செல்போன் அழைத்தது.
தெரிந்த நம்பர் தான். அழைப்பது தீபக்.
போனை பார்த்து சிரித்தாள். ஆர்த்தி புரிந்துக் கொண்டாள்.
'இப்ப தானடி பாத்துக்கிட்டீங்க.'
'போடி.. சங்கி ஆர்த்தியை தள்ளி விட்டு பால்கனி நோக்கி ஓடினாள் .
'சீக்கிரம் முடிச்சிட்டு வா. நானும் என் ஆள் கிட்ட பேசிட்டு வரேன்'
ஆர்த்தி அழைத்த நம்பர் பிஸியாக இருந்தது. மீண்டும் முயற்சித்தாள்.

தீபக் வீடு வந்து சேர்ந்தான். லுங்கியுடன் கம்ப்யூட்டரில் வேலை பார்த்து கொண்டிருந்தான் வருண். செல்போனில் பேசிக்கொண்டே ஷுவை கழற்றினான் தீபக். 'ஹ்ம்ம்...வீட்டுக்கு வந்துட்டேன்..அப்பறம் கால் பண்றேன்.'
'யாருடா?' வருண் கேட்டான்.
'அம்மா மச்சி... வீட்டுக்கு வந்துட்டியா... சாப்டியா னு  எப்ப பாத்தாலும் கேள்வி கேட்டுட்டே இருக்காங்க' தீபக் அலுத்துக்கொண்டான்.
வருண் சுழர் நாற்காலியில் சுற்றி திரும்பினான்.
'நம்பிட்டேன்'
தீபக் செல்போன் மறுபடி உயிர்பெற்றது. இந்த முறை அழைத்தது ஆர்த்தி.
'ஹலோ? ஹ்ம்ம். ஹ்ம்ம்.' ஹ்ம்ம் கொட்டிகொண்டே உள்ளறை சென்றான்.

'ஏன்டா போன் எடுக்கல?'
'அம்மா பேசிட்டு இருந்தாங்க'
'ஹ்ம்ம்'
'கோச்சிக்கிட்டியா?'
'ஆமா.. சனிக்கிழமை கூட ஆபீஸ்ல குப்ப கொட்டனுமா? என் ரூம்மேட் பாரு. ஜாலியா என்ஜாய் பண்றா அவ பாய் பிரெண்ட் கூட'
'சரி சரி .. நாளைக்கு கண்டிப்பா மீட் பண்ணுவோம்'
'சாப்டியா?'
'இப்போ தான் வீட்டுக்கு வந்தேன். மதியமே சாப்பிடல'
'லூஸு.. போய் சாப்பிடு.. நா நைட் கால் பண்றேன்'
'வேணாம்.,, நா அம்மாக்கு கால் பண்ணிட்டு அப்பறமா உனக்கு கால் பண்றேன்'
'ஏன்டா அம்மாக்கு இப்படி பயப்படற?'
'அதெல்லாம் இல்ல. நா தூங்கறதுக்கு முன்னாடி கேட்கற கடைசி குரல் உன்னுதா இருக்கணும்.'
'சரி சரி கால் பண்ணு.. நைட் பேசுவோம்'

தீபக் ரூமில் இருந்து வெளியே வந்தான். வருண். முறைத்தான்.
'எப்டி சமாளிச்சேன் பாத்தியா?' வெற்றி சிரிப்பு சிரித்தான் தீபக்.
'ஏன்டா காதல்ன்ற பேர்ல எங்கள மாதிரி இருக்கற யூத்-தையும் சேத்து அசிங்க படுத்துறீங்க'
'விடு மச்சி... பல்லு  இருக்கறவன் பகோடா சாப்பிடறான்.'
'மகனே.. நீ பண்ற வேலைக்கு எல்லாம் ஒண்ணா சேத்து என்னிக்காவது மாட்டுவ'
'மச்சி.. இந்த சுதந்திரம் எல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடி தான். கல்யாணம் ஆயிட்டா பொண்டாட்டி பின்னாடியே சுத்த வேண்டியது தான்'
'டேய் சீரியஸ்ஸா சொல்றேன் கேளு. கல்யாணம் எல்லாம் பிக்ஸ் பண்ணியாச்சு.. இனிமே இப்பிடி பொய் சொல்லிக்கிட்டு திரியாத.'
'யப்பா. ஹரிச்சந்திரா.. இதெல்லாம் சப்ப மேட்டர். நீ எல்லாம் எப்போடா வளருவ? போ. மேட்ரிமோனியல் சைட் தானே நோண்டிட்டு இருந்த.. போய் அதுல எதாவது மாட்டுதா பாரு'

தீபக் அம்மாவிடம் பேசி முடித்ததும் கால் செய்தான்.. சங்கி க்கு.
'சொல்லுடா'
'என்ன பண்ற?'
'இபோ தான் சாப்பிட்டு வரேன் என் ரூம் மேட் கூட'
'ஹ்ம்ம். ரொம்ப நாளா கேக்கறேன் உன் ரூம் மேட் க்கு இன்ட்ரோ குடுன்னு'
'குடுத்தா?'
'குடுத்தா அவளையும் சேத்து கரெக்ட் பண்ணுவேன். ஒரே மேடைல ரெண்டு கல்யாணம்'
'அய்யே.. ஆசைய பாரு. நா இன்ட்ரோ தரேன். நீ முடிஞ்சா கரெக்ட் பண்ணிக்கோ'
'இந்த ஸ்டேட்மென்ட் க்கு என்னிக்காவது நீ பீல் பண்ணுவ மகளே'

ஆர்த்தி தன் போன் எடுத்து தீபக்-க்குக்கு கால் செய்தாள். பிஸி லைன்.
சங்கி ஒரு மணி  நேரம் போனில்  பேசி முடித்துக்  களைப்புடன் பால்கனியில் இருந்து உள்ளே வந்தாள்
'என்னடி ஆர்த்தி. தூங்கலையா?'
'உனக்கு என்னப்பா? உன் ஆளு கரெக்டா டைம்க்கு கால் பண்ணிடறான். என் ஆளு கால் பண்ணா எடுக்கவே மாட்றான்'
சொல்லும் போதே ஆர்த்தி கையில் செல்போன் துடித்தது.
'இப்போ என் டர்ன்' என்று சிரித்துக்கொண்டே பால்கனி சென்றாள் ஆர்த்தி.

'யார் கூட டா மொக்க போட்டுட்டு இருந்த?
'என்ன ஆர்த்தி? அம்மா கிட்ட பேசிட்டு உனக்கு கால் பண்றேன்ன்னு சொன்னேன் இல்ல. நீ ஏன் நடுவுல கால் பண்ணிட்டே இருக்க?'
'சரி சரி சாரி டா. என் பிரெண்ட் மட்டும் எந்நேரமும் அவ பாய்பிரெண்ட் கூட கடலை போட்டுட்டே இருக்கா.. அதான்'
'அவள எனக்கு இன்ட்ரோ குடு. .. அவளையும் சேத்து கரெக்ட் பண்றேன்.'
'டேய் ஒரு கேர்ள் பிரெண்ட் கூட டைம் ஸ்பெண்ட் பண்றதுக்கே வழிய காணோம்.. உனக்கு இன்னொண்ணா?'
'அப்போ டைம் இருந்தா கரெக்ட் பண்ணிக்கோ ன்னு  சொல்ற? '
'மூஞ்சிய பாரு. நா இன்ட்ரோ தரேன். முடிஞ்சா கரெக்ட் பண்ணிக்கோ'

அடுத்த நாள். ஆர்த்தி அரை கதவை திறந்து உள்ளே நுழைந்தாள்.
'என்ன சங்கி? எனக்கு முன்னாடி ரூமுக்கு வந்துட்ட? சண்டே தானே இன்னிக்கு? உன் ஆளு கூட ஊர் சுத்தலையா?'
'அவனுக்கு ஏதோ வேலையாம்டீ'
'ஹ்ம்ம். நேத்து என் ஆளுக்கு வேல.. இன்னிக்கு உன் ஆளுக்கு வேல'
சங்கி பெட்-டில் அமர்திருக்க, பெட் முழுக்க திருமண அழைப்பிதழ் பரப்பி இருந்தது.
'இந்தா... என்னோடமேரேஜ் இன்விடேஷன் வந்துடுச்சு. உனக்கு தான் பர்ஸ்ட்.'
ஆவலாய்  வந்து வாங்கி கொண்டாள்  ஆர்த்தி.
'உனக்கு குடுக்க கூடாது நு தான் பார்த்தேன். இன்னும் உன் ஆளு பேரு எனக்கு சொல்ல இல்ல.' சங்கி கோபித்தாள்.
ஆர்த்தி திருமண அழைப்பிதழை திறக்காமல் மடித்து வைத்தாள்.
'சரி ஒண்ணு  பண்ணலாம். ரெண்டு பெரும் ஒரே நேரத்துல பேர் சொல்லுவோம். அப்பறம் நா இன்விடேஷன் பாக்கறேன்'
'ஓகே. ரெடி.. ஒன்.. டூ..த்ரீ'
'தீபக்....'
அறை முழுக்க பெயர் எதிரொலித்தது.

அன்றிரவு. அடையாரில் ஒரு ஐந்து நட்சித்திர ஹோட்டல்.ஆர்த்தியும் சங்கியும்  மெழுகு ஏற்றிய டேபிள் ஒன்றில் அமர வைக்கப்பட்டார்கள்.
'கடைசியா உன் ஆள மீட் பண்ண போறேன். ' ஆர்த்தியின் கைப்பிடித்து சந்தோஷப்பட்டாள் சங்கி.
'சேம் பின்ச்'
'இத விட சேம் பின்ச்' பாரேன். ரெண்டு பேருக்கும் ஒரே பேரு. பயங்கர கோயின்சிடன்ஸ் இல்ல?'
''நா மொதல்ல என் தீபக்-க்கு பேர் மாத்தி வைக்க போறேன். ரொம்ப கன்பியுஸ் ஆகுது இல்ல?'
ஆர்த்திக்கு எஸ்எம்எஸ் வந்தது. தீபக்கிடம் இருந்து.
'ஹே.. என் தீபக் வந்துட்டானாம். வெளிய இருக்கான். நா போய்  கூட்டிட்டு வரேன்.'
''சீக்கிரம் வா.'

ஆர்த்தி தீபக்கை அழைத்துக் கொண்டு வந்தாள்.
டேபிளில் சங்கி ஒருவனிடம் சிரித்து பேசி கொண்டிருந்தாள்.
'சங்கி...திஸ் இஸ் தீபக்' ஆர்த்தி அறிமுகப்படுத்தினாள்.
'ஹாய் தீபக்.   ஆர்த்தி.. இது என் தீபக்' ஆர்த்தி ஹாய் சொன்னாள்.
தீபக்கும் தீபக்கும் ஹாய் சொல்லி கை குலுக்கினார்கள்

“Coincidence is God's way of remaining anonymous.” 
― Albert EinsteinThe World As I See It

Saturday, January 11, 2014

Peelings

Last Saturday I went to a Cineplex with my friends to watch an action movie.
Just like everyone, I was so involved in the movie that it left after effects in me.

Everyone gets that weird feeling after watching an heroic movie.
You would break your knuckles unnecessarily, feel an inch taller, wanting to hit some bad guys and would walk with a rock music behind….feeling like an hero.

When the movie was over, we came out and I walked to car parking alone to get my car to the front gate where my friends were waiting. (of course, with a rock music inside my head. J). Suddenly something disturbed my thoughts and I came to the real world. I looked behind and saw a black car following me.

The face didn’t look familiar. A middle aged man with beard, sun glasses on and a cigar casually hanging from his lips. I started walking again and the car followed me slowly. I increased my pace and the car did the same. I deliberately stopped and the car stopped.

I got a bit nervous and started thinking the ‘movie’ way - When was the last time I indulged in a fight or mentally tortured someone? Did someone hire a thug for messing up with them? But I couldn’t remember of any specific event.

I gathered some courage (the heroic feel helped) and went straight to the car and knocked the door gently. The glasses rolled down.

‘Excuse me Boss. I feel as if I am taking your big car for a walk. Why are you following me?’

He took a deep puff and replied:

‘So that I can park my car once you take yours out. The parking lot is full’.


The hero died pathetically. L

 (story from my old PST)